(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய
வாழைச்சேனையை சேர்ந்த கர்ப்பிணி தாய் டெங்கு நுளம்பு காச்சலினால் சிகிச்சை
பலனின்றி நேற்று வியாழக்கிழமை (25) ,இரவு உயிரிழந்துள்ளார் மாவட்டத்தில்
,இந்த வருடம் ,இடம்பெற்ற முதலாவது டெங்கு மரணம் ,இதுவாகும் என போதனா
வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாரஞ்சினி தெரிவித்தார்.
மட்டு
போதனா வைத்தியசாலையில் , வெள்ளிக்கிழமை (26) ,இடம்பெற்ற ஊடக
மாநாட்டில் மகப்பேறு வைத்திய நிபுணர் சி. சரவணன், மற்றும் வைத்திய
நிபுணர்கள் மயக்க மருந்து நிபுணர்கள் கலந்து கொண்டனர் ,இதன் போது வைத்திய
பணிப்பாளர் கலாரஞ்சினி ,இவ்வாறு தெரிவித்தார்.
வாழைச்சேனை
பேத்தாழை பிரதேசத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான 26 வயது ,இளம் தாய்
கடந்த 17ம் திகதி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
அதன் பின்னர் அவரை 7ம் ,இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனையில்
அவருக்கு டெங்கு நோய் ,இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதன் பின்னர் 18 ;
திகதி அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வைத்திய நிபுணர்கள்
சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
,ந்த நிலையில் அவர் 21ம் திகதி
சுக பிரசவம் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்து கொண்டர் ,
பின்னர் அவருக்கு தொடர்ந்து ,இரத்த போக்கு ஏற்பட்டதனால் அதற்கான சிகிச்சை
அளிக்கப்பட்டு சுமார் 12 பைந் இரத்தம் ஏற்றப்பட்டது
,அதனை
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த போதும் டெங்கு நோய்
கட்டுப்ட்டிற்கு வராத நிலையில் அவரின் ,இருதயம் மற்றும் மூளை, சிறுநீரகம்
செயலிழந்து கொண்ட நிலையில் அவர் 25 ம் திகதி வியாழக்கிழமை ,இரவு 10.00
மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எனவே டெங்கு நோயால் ,ந்த ஆண்டில் மரணித்த முதலாவது ,ளம் தாய் ஆவார் என தெரிவித்தார்.
,இதேவேளை
வாழைச்சேனை போத்தாழை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு குழந்தையின்
தாயாரான பட்டதாரியான மோகன் ஜெயபிரியா என்பவரே ,இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours