சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் இவ்வருடம் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் உயர்தர (ஏ.எல்)தின விழா செவ்வாய்க்கிழமை அதிபர் கே. தியாகராசா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மாணவர்களால் கலையும் மேகங்கள் சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டது .
இந்நிகழ்வில் பாடசாலையின் வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ. அஸ்வர், பாடசாலையின் ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Post A Comment:
0 comments so far,add yours