(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

திருகோணமலை Mc Heyzer உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான (Eastern Province School Badminton Tournament) போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவன் எம்.எம். அஸ்மல் தனிநபர் ஒற்றையர் போட்டியில் சிறப்பாக விளையாடி 3rd place (2nd Runner Up) பட்டத்தை பெற்று தேசிய மட்ட ஒற்றையர் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவனை வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஏ.எம். அப்ராஜ் றிழா, எம்.எச்.எம். முஸ்தன்ஸிர் ஆகியோரை கல்லூரியின் முதல்வர் எம்.ஐ. ஜாபீர் (SLEAS) இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் எஸ். முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours