(கனகராஜா சரவணன்)  



மட்டு பாசிக்குடா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (17) காலையில் மீட்டகப்பட்டுள்ளதாகவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிசாரை நாடுமாறு பாசிக்குடா பொலிசார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடற்கரை பகுதியில் சம்பவ தினமான இன்று காலை கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்

இதனையடுத்து பொலிசார் குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் குறித்தவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பாசிக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours