(அஸ்லம் எஸ்.மௌலானா)


பல்கலைக்கழக சவால்களை ஈமானுடன் எதிர்கொள்வோம் (கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம்) எனும் கருப்பொருளில் 2026 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவ, மாணவிகளுக்கான இஸ்லாமிய வாழ்வியல் வழிகாட்டல் கருத்தரங்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது - மாளிகைக்காடு கிளையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) ஜம்இய்யாவின் காரியாலயத்தில் நடைபெற்றது.


ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷேய்க் மீராசாஹிப் சலீம் (ஷர்க்கி) அவர்களின் தலைமையில் அதன் செயளாலர் அஷ்ஷேய்க் நப்றாஸ் ஹனீபா ரஹ்மானி அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம வளவாளராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஒலுவில் கிளையின் தலைவர் அஷ்ஷேய்க் ஏ.எல். பைஸல் (மதனி) அவர்கள் கலந்து கொண்டார்.

அத்துடன் மௌலவியா நுஸ்கா அவர்கள், பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டொழுங்கு முறைமைகளை வலியுறுத்தி உரை நிகழ்த்தினார்.

சாய்ந்தமருது பிரதேச பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் முஹம்மட் செளபி நன்றியுரை நிகழ்ந்தினார்.

இந்நிகழ்வுக்கு சனா றைஸ் மில் உரிமையாளர் அல்ஹாஜ் பாரூக் 

அனுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours