கே.கிலசன்
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை 40 வட்டை எனும் கிராமத்தில் நிலக்கடலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பசளைப்பிரயோகம் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.ஜனகோபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ரீ.மேகராசா பாடவிதான உத்தியோகத்தர் என்.விவேகானந்தராஜா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம சேவகர் விவசாய போதனாசிரியர்கள் மற்றும் அதிகளவிலான விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
நிலக்கடலை செய்கையில் அதிக விளைச்சலை பெறுவதற்கு எவ்வாறு முறையான பசளைப் பிரயோகம் செய்வது எந்தப் பருவத்தில் எவ்வாறான பசளைகளை இடுதல் தொடர்பாகவும் செய்முறை ரீதியாக தொழிநுட்ப உத்தியோகத்தர் விவசாய போதனாசிரியர் மற்றும் பாடவிதான உத்தியோகத்தரால் தெளிவான விளக்கமளிக்கப்பட்டது.




Post A Comment:
0 comments so far,add yours