எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நான் ஒரு சிறந்த ஜனாதிபதியாக செயற்படுவேன் என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்ட விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயேஇதை குறிப்பிட்டார்.
தேர்தலில் வெற்றி பெற்றதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் இவர் வெளியிட்ட முதல் செய்தி இதுவாகும்.
Post A Comment:
0 comments so far,add yours