(துதி)
மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமை புரியும் ச.மகேந்திரநாதன் அவர்கள்இலங்கைத் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்றைய தினம் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
இவர் உன்னிச்சையில் பிறந்து தற்போது புதுநகரில் வசிப்பதோடு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிகின்றார். இவர் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பிரிவில் கனிஸ்ட பொருளாளராகப் பதவி வகித்ததோடு, வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தின் கிழக்குமாகாணச் செயலாளராகவும் இருந்தவர். மேலும் விளையாட்டு கழகங்கள், கிராமிய அமைப்புக்கள், கோயில் நிருவாக அமைப்புகள் போன்றவற்றில் பல பதவிகளை வகித்தவர்.
சமூக சேவையில் ஈடுபாடு கொண்டு உதவும் கரங்கள் என்ற அமைப்பை ஸ்தாபித்து அதனூடாக பல ஏழை மாணவர்களுக்கு உதவி புரிந்து வருகின்றார். இவரது வளர்ச்சியில் இவரது தாயாரான மனோன்மணி அவர்களின் பங்கு அளப்பரியதாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours