இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார்.
இதில் 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயதுடைய நபர் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது மரணம் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக பதிவாகி உள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours