உலகளாவிய ரீதியில் கொரானா வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளன.
அத்துடன், தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாகவும் உள்நாட்டில் புதிதாக எவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லையென சீனா அறிவித்துள்ளது.
பிரேஸிலில் ஆரம்பமாகின்ற குளிர்காலம் கொரோனா வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்குமென மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரேஸிலில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், அங்கு ஆரம்பமாகும் குளிர் காலநிலை நிலைமையை மேலும் மோசமடையச் செய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற மருத்துவ சேவையாளர்கள் 65,000 பேரை மீண்டும் சேவையில் இணையுமாறு பிரித்தானிய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours