(  அஸ்ஹர் இப்றாஹிம்)

” சபிரி கமக் ”  வேலைத்திட்டத்தின் கீழ் திகாமடுல்ல மாவட்டத்திலுள்ள மிகவும் கஸ்டப்பிரதேசமான குமாரிகம ” பீ ” பிரிவு பௌத்த விகாரைக்கு செல்லும் வீதிக்கு    கொங்கிறீட் இடும் வேலைகள்  முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , முன்னாள் இராஜாங்க அமைச்சருமான  விமலவீர திஸாநாயகவின் பணிப்புரையின் பேரில்  கடந்த திங்கட் கிழமை ( 18 ) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்வீதி கடந்த பல வருடங்களாக செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டதோடு வாகன சாரதிகள் மற்றும் கிராமவாசிகள் போக்குவரத்து செய்வதில் பலவிதமான கஸ்டங்களையும் அனுபவித்து வந்தனர்
.மழை காலங்களில் வெள்ளநீர் நிறைந்து காணப்படுவதால் இவ்வீதி சேறும் சகிதியுமாக காணப்பட்டது.பிரதேசவாசிகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயகவின் கவத்திற்கு கொண்டு வந்ததனைத் தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. ,

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours