த.தவக்குமார்\

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் சச்சிதானந்தன் விக்னேஸ்வரன் (29) கட்டிடவேலை உதவியாளராக வேலை செய்யும் போது தவறுதலாக விழுந்து மரணமடைந்த சம்பவம் இன்று (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது குறித்த இளைஞன் அண்மையில் வெளியாகியுள்ள பட்டதாரி பயிலுனர் பெயர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டிருந்ததாகவும் விரைவில் தனது கடமையினை பொறுப்பேற்கவிருந்த நிலையில் தனது வீட்டு கஷ்ரநிலமை காரணமாக நாளர்ந்த கட்டிடவேலை உதவியாளராக காத்தாங்குடி பிரதேசத்தில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் செய்துகொண்டிருந்த நிலையில் நீர்த்தாங்கியினை சுந்தம் செய்ய மேலே ஏறிய போது தவறுதலாக கீழேவிழுந்து படுகாயமடைந்த நிலையில் கடந்த 19ம் திகதி காத்தாங்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 21 மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக காத்தாங்குடி (வடக்கு) பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Share To:

Post A Comment:

0 comments so far,add yours