(த.தவக்குமார்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகநேரிபிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சுற்றுலாவிடுதி வாகநேரியைச் சேர்ந்த நா.ததுஷன் (16) என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது அவரது பிலதேசத்தில் இட்மபெற்று வரும் ஆலய உற்சவம்மென்றில் கலந்து கொண்டு அரது வீடுநேக்கி சென்றுகொண்டிருக்கும் போது அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப'பாட்டை இழந்து பாதையை வட்டு விலகியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post A Comment:
0 comments so far,add yours