பயணத்தடை விதிக்கப்படவுள்ளமையினால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீட்டில் சேமித்து வைக்குமாறு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தியுள்ளார்.

நாளைமுதல் பயணத்தடை விதிக்கப்படுவதால் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக் கொள்ளுமாறு இராணுவத்தளபதி மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.

நாளை இரவு 11 மணிக்கு அமுலாகும் பயணத்தடை எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. மீண்டும் அதேநாள் இரவு 11 மணி முதல் எதிர்வரும் 28 ஆம் தகதி அதிகாலை நான்கு மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது செய்திகளின் தொகுப்பு,

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours