( எம். என். எம். அப்ராஸ்)



கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவில் முதலாவதுகொரொனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (24)  ஆரம்பிக்கப்பட்டது 



 இதற்கமைய கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த 

 வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப்.றஹ்மான் தலைமையில்மற்றும்நேரடி கண்கானிப்பிலும் உத்தியோகபூர்வமாக தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

மேலும் இதன் போது பொது மக்கள் கோரோனா

தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசியை பெற்றுக் கொணடனர்.



இதேவேளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை எல்லைக்குட்பட்ட 13 சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் 

தடுப்பூசி செலுத்தும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்று(24)ஆரம்பிக்கப்பட்டுள்ளமைஇங்கு குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours