( காரைதீவு   சகா)

கல்முனை வலயக் கல்வி பணிப்பாளராக இடமாற்றம் பெற்ற எம்.எஸ்.சஹதுல்  நஜீமிற்கு சம்மாந்துறையில் இன்று(9) செவ்வாய்க்கிழமை பிரியாவிடை நடாத்தப்பட்டது.

சம்மாந்துறை வலய கல்வி கல்வி சார் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிபர்கள் ஏற்பாடு செய்த இவ் வைபவம் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.


வலய பிரதி கல்வி பணிப்பாளர் ஹைதர் அலி  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பலரும் அவரது சேவைகள் பற்றி பாராட்டிப் பேசினார்.

சம்மாந்துறையில் அதிகூடிய எட்டரை வருட சேவையாற்றிய  பணிப்பாளர் நஜீமிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours