(சுமன்)


கார்த்திகை 27 மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும் புலத்திலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் லண்டன் ஒக்ஸ்போட் நகரில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் பங்குபற்றி மாவீரர்களுக்கான அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான பு.ரூபராஜ் மற்றும் இரா.அசோக் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

லண்டன் தொம்சன் ரூடர்ஸ் நிதியத்தின் கலந்துரையாடல் மற்றும் வருடாந்த ஒன்றுகூடலுக்காக லண்டன் சென்றுள்ள மேற்படி உறுப்பினர்கள் குறித்த நினைவேந்தல் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினரின் அழைப்பின் பேரில் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது




.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours