(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் த.சிவராம் 18 வது ஆண்டு நினைவேந்தல்  இன்று சனிக்கிழமை (29) கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் எழுச்சுp பூர்வமாக அனுஷ;டிக்கப்பட்டது.

கடந்த 2005- 4 29 ம் திகதி  கொழும்பில் வைத்து சிரேஸ்ட ஊடகவியலாளர் த.சிவராம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்கு அண்மித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட உடகவியலாளரின் 18 வது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு காரியாலயத்தில் இடம்பெற்ற நினைவேந்தலில் கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அன்னாரது திரு உருவபடத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மல் தூவி  இரு நிமிட மௌன  அஞ்சலி செலுத்தினார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours