நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் காணப்படுகின்ற ஆயுர்வேத வைத்தியசாலைகளின் பங்களிப்பினை உச்ச அளவில் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் பயன்படுத்தி வருகின்றார். ஆயுர்வேத வைத்தியசாலைகளின் பணிகள் மற்றும் மருந்து விநியோகத்தில் முன்னரை விட ஒரு புதிய பரிணாமம் ஏற்பட்டு தற்போது ஆய்வுகள் உற்பத்திகள் என்று பல நடவடிக்கைகள் பணிப்பாளர் அவர்களினால் முடக்கிவிடப்பட்டிருக்கின்றது.

இதன் ஒரு அங்கமாக கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் சாய்ந்தமருது ஆயுர்வேத வைத்தியசாலைக்கு காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வைத்தியசாலையின் நம்பிக்கையை கட்டியெழுப்பி அதிகமான நோயாளிகளை கவர்ந்தெடுப்பதற்குமான முதற்கட்ட நடவடிக்கையாக திட்டமிடல் கலந்துரையாடல் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம் ஏ நபீல்,  திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம் மாஹிர், ஆயுர்வேத வைத்திய சாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகளும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours