நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய ஆசிரியை திருமதி எம்.ஏ.ஆர். பாத்திமா சியானா அவர்களின் நெறிப்படுத்தலில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி அவர்களின் தலைமையில் சித்திரக் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு காரைதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளரும், கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளருமான ஏ. சஞ்ஜீவன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த சித்திரக் கண்காட்சி சிறப்பாக நடைபெற வழிகாட்டியாக இருந்த காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. சஞ்ஜீவன் அவர்களுக்கும், பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி அவர்களுக்கும் நிகழ்வுக்கு மிகவும் ஒத்துழைப்பு வழங்கி ஏற்பாடுகளை மிக நேர்த்தியாக செய்த பாடசாலை பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். இர்ஷாத், அபிவிருத்தி உத்தியோகத்தர் பீ.எம்.நாஸிக் ஆகியோருக்கு ஆசிரியை திருமதி எம்.ஏ.ஆர். பாத்திமா சியானா நிகழ்வின் முடிவில் நன்றிகளை தெரிவித்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours