( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு
தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் கவியரங்கம் நாளை 25ஆம் தேதி வியாழக்கிழமை
பௌர்ணமியன்று சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி தலைமையில்
தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டின் யுலேகா முரளிதரன் கலந்து சிறப்பிப்பார்.
சிறப்பு
அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்
சரவணமுத்து நவநீதன் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுக அமைப்பின் தலைவர்
சித்திரப்போடி மாமாங்கராஜா ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.
தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி மு. கணேச ராஜா வரவேற்புரை நிகழ்த்த, தமிழ்ச்சங்க காப்பாளர்
கலாநிதி எஸ்.கோபாபாலசிங்கம் ( கவிக்கோ வெல்லவூர் கோபால்) தலைமையில் கவியரங்கம் நடைபெறும்.
கவியரங்கத்தில்
கா.சிவலிங்கம், மண்டூர் அசோகா, இந்திராணி புஸ்பராஜா, ச. கணேசமூர்த்தி,
இ.பிரதீஸ்காந்த், ஜெ.அம்ரிதா ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours