வெளியான உயர்தரப் பரீட்சையில் அதிகஷ்டப் பிரதேசமான வேப்பையடிப்பிரதேசத்தில் இருமாணவர்கள் பொறியியல் துறைக்குத் தெரிவாகி சாதனைபடைத்துள்ளனர் 

இதில் லோகேஸ்வரன் தபோசன் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திபெற்று மாவட்டமட்டத்தில் 8 ஆவது நிலையினையும் தியாகராசா சஜந் ஏ.பி.சி  சித்திபெற்று மாவட்டமட்டத்தில் 64 வது நிலையினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்

இவர்கள் இருவரும் கல்முனை கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலையில் உயர்தரம் கற்று இச்சாதனை நிலைநாட்டியுள்ளதுடன் ஆரம்பக் கல்வி தொடக்கம் சாதாரண தரம் வரை வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் கற்று உயர்தரத்தினை கல்முனை பாற்றிமா தேசியபாடசாலையில் கற்று வெளியான உயர்தரப் பரீட்சையில் இச்சாதனை நிலைநாட்டியுள்ளார்கள்;.  


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours