நூருல் ஹுதா உமர்  

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான "தாய் கொண்டோ" சுற்றுப் போட்டி கடந்த வாரம் மாத்தறை "கொட்டவில" உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்தது. இச் சுற்றுப் போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் ஆர்.எம். அல்தாப் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் இந்த பாடசாலை தொடர்ச்சியாக நான்கு வருடங்களாக (2022- 2025) தாய்க் கொண்டோ போட்டியில்  பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இவ் அடைவிற்கு உறுதுணையாக இருந்து மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழங்கிய கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜாபீர், இணைப்பாடவிதான திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் ஏ.எல்.எம். தன்ஸீல் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி நெறிப்படுத்திய பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியரும், பிரதம பயிற்றுவிப்பாளருமான யூ.எல்.எம். இப்ராஹிம் மற்றும் உதவி பயிற்றுவிப்பாளர்கள் ஜே.ஏ. சுமைட், ஏ.ஏ. ஹமீம், ஏ.ஏ. ஹம்தான், ஏ.ஏ. ஷிஹாப், எம்.எச்.ஏ. ஹஸீன் மற்றும் போட்டிகளில் பங்கேற்று தனது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் குறிப்பாக பதக்கம் வென்ற மாணவருக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, போட்டிகளில் பங்கேற்க ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours