(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை கோட்டத்திற்குரிய அந்-நூர் மஹா வித்தியாலயம் மற்றும் பாலமுனை ஹிதாயா மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா திடீர் கள விஜயம் மேற்கொண்டார்.

குறிப்பிட்ட பாடசாலைகளின் ஆளணி மற்றும் பௌதீகக் குறைபாடுகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டார்.

அங்கு காணப்படும் இக்குறைபாடுகள் விரைவில் அரசாங்கத்தினால் நிவர்த்தி செய்யப்படும்  எனவும் அவர் உறுதியளித்தார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours