க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு
ஆரைப்பற்றை நொத்தாரிஸ் மூத்ததம்பி பாடசாலையின் "130 அகவைதினம்"
இன்றையதினம்(25)அதிபர் து.குகப்பிரியன் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.
கல்லூரியின்
ஸ்தாபகர் நொத்தாரிஸ் மூத்ததம்பி முதலியாரின் திருவுருவப்படத்திற்கு
நொத்தாரிஸ் மூத்ததம்பி முதலியாரின் நான்காவது வாரிசான ஓய்வுபெற்ற நிருவாக
உத்தியோகஸ்தர் வி.வித்தியானந்த முதலியார் மாலை அணிவித்து அன்னாரின்
நினைவுகூரப்பட்டதுடன் பாடசாலையின் வரலாறுகள்,பாடசாலை ஆரம்ப விபரங்கள்
முதலியன நிகழ்வில் கலந்துகொண்ட அதிதியான திருமதி.கோகிலாதேவி
பாலசுப்புரமணியமுதலிஅவர்களால் கருத்துரைக்கப்பட்டது.இதன் பின்னர் கேக்
வெட்டி கல்லூரிதினம் கொண்டாடப்பட்டது.


Post A Comment:
0 comments so far,add yours