இவ்வாலயத்தின் கருவறையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானின் திருவுருவம், கருங்கல்லினால் தானாகத் தோன்றிய (சுயம்பு) அற்புத மூர்த்தியாகும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.
இப் பெருவிழா நேற்று (25.08.2026)ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை விநாயகர் வழிபாடு, கிராம சாந்தி மற்றும் அங்குரார்ப்பணம் ஆகிய கிரியைகளுடன் ஆரம்பமாகி, இன்று (26.08.2026)ஆம் திகதி காலை 8:00 மணிக்கு மங்கள கரமான சுபவேளையில் கொடியேற்றம் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து உற்சவங்கள் சிறப்பாக இடம்பெற்று, (02.09.2026)ஆம் திகதி புதன்கிழமை இரவு திருவேட்டை உற்சவமும், (04.09.2026)ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை நவகிரி ஆற்றில் தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை கொடியிறக்கத்துடன் மஹோற்சவம் இனிதே நிறைவுபெறும்.
உற்சவ காலங்களில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளதுடன், அபிஷேகப் பொருட்களை வழங்கி சுயம்பு மூர்த்தியான எம்பெருமானின் திருவருளைப் பெறுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் அனைத்து பக்தர்களையும் அன்போடு அழைக்கின்றனர்.
(எஸ்.ரஞ்சன்)





Post A Comment:
0 comments so far,add yours