திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில், நீண்டகாலமாக கதிரைகள் இன்றி குறைபாடாக காணப்பட்ட கணினி ஆய்வுக்கூடத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மாணவர்களின் கற்றல் நலனைக் கருத்தில் கொண்டு 1999 ஆம் ஆண்டு O/L பழைய மாணவர் அணியினரால் கதிரைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


இன்று (31.07.2026) ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பாடசாலை அதிபர் த. இராசநாதன் அவர்களிடம் குறித்த கதிரைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.


இந்நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் இ. சுவர்ணராஜ், உறுப்பினர் எஸ். சுஜீகாந்த், ஆசிரியர்கள், 1999 ஆம் ஆண்டு O/L பழைய மாணவர் அணியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த உதவியை வழங்கி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்த பங்களிப்பு செய்த 1999 ஆம் ஆண்டு O/L பழைய மாணவர் அணியினருக்கு பாடசாலை நிர்வாகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.


(ரஞ்சன்)


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours