எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான வசதிகளை வழங்கும் நிகழ்வொன்று  கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வந்தறுமுலை விவசாய விரிவாக்கல் மையத்தில், 2026 செப்டம்பர் 09 அன்று நடைபெற்றது.

இங்கு, மாகாண விவசாயத் திணைக்களத்தின் 2026 ஆண்டு ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் PSDG 2026 திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு நீர் இறைப்பிகள் வழங்கப்பட்டு, விவசாயக் கிணறுகள் அமைப்பதற்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

25.88 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம், விவசாயிகளின் சாகுபடிக்கான நீர் வசதிகளை மேம்படுத்துதல், விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் அவர்களின் பொருளாதார வலிமையை மேம்படுத்துதல் ஆகும்.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான உதவிகளை வழங்கிவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours