Articles by "மரணம்"
Showing posts with label மரணம். Show all posts

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன் அவர்களின் துனைவியார் நந்தினிதேவி சிவம்பாக்கியநாதன் நேற்று (27) திகதி செவ்வாய்க்கிழமை இறைபதமடைந்துள்ளார்.

திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

சிவம் பாக்கியநாதன், லேக் ஹவுஸ் பத்திரிகையின் நிருபராகவும், மட்டக்களப்பு விஸ்வகர்மா கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




சுதந்திர ஊடகவியலாளரும் சமாதான நீதிவானுமாகிய உ.உதயகாந்தின் தாயார் நேற்று (09) திகதி இரவு இயற்கையெய்தியுள்ளார். 

கல்லடி உப்போடையை பிறப்பிடமாகவும், கல்லடி வேலூரை வசிப்பிடமாகவும் கொண்ட 62 வதுடைய உதயரஜனி உதயகுமார் ஆகிய இவர் மூன்று பிள்ளைகளின் அன்பு தாயார் ஆவார். 

கடந்த சில மாதங்களாக சுகயீனமுற்றிருந்த இவர் நேற்று (09) வியாழக்கிழமை இரவு திடீரென இயற்கையெய்தியுள்ளார்.

இவரது இறுதிக் கிரிகைகள் அன்னாரது கல்லடி வேலூரில் உள்ள இல்லத்தில் இன்று (10) திகதி பி.ப 4.30 மணியளவில் நிகழ்த்தப்பட்டு, அதன் பின்னர் கல்லடி உப்போடை இந்து மயானத்தில் நல்லடக்கம் இடம்பெறவுள்ளது.