Articles by "கட்டுரைகள்"
Showing posts with label கட்டுரைகள். Show all posts

 




திருவாதிரை என்பது ஆன்மிகமும் பண்பாடும் இணையும் திருநாள்.
தமிழ் மக்களின் ஆன்மிக வாழ்க்கையிலும் பண்பாட்டு மரபிலும் முக்கிய இடம் பெற்ற திருநாள்களில் திருவாதிரையும் ஒன்றாகும். 

 திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் சிறப்பு நிகழ்வு. 

சிவபெருமானை மையமாகக் கொண்டு கொண்டாடப்படும் இந்த விழா, சைவ சமயத்தின் உயர்ந்த தத்துவங்களை வெளிப்படுத்துகிறது.
திருவாதிரை நாளில் சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியதாக நம்பப்படுகிறது. இந்த நடனம் உலகின் படைப்பு, நிலை, அழிவு, மறைவு, அருள் ஆகிய ஐந்து செயல்களை (பஞ்சகிருத்தியங்கள்) குறிக்கிறது. சிதம்பர நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவம் உலகப் புகழ் பெற்றதாகும். அன்றைய தினம் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், நடன ஆராதனைகள் ஆகியவை விமரிசையாக நடைபெறுகின்றன.

திருவாதிரை அல்லது ஆருத்ரா தரிசனம் என்பது தமிழர் வாழ்வில் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். 

இந்த நாளை தமிழர்கள் பக்தி பரவசத்தில் கொண்டாடி, பச்சிலை, மாவிலாக்கொடி, மஞ்சள் போன்றவற்றால் வீடுகளை அலங்கரித்து கொண்டாடுவர். 

திருவாதிரை விரதம் - இன்று ஜனவரி 03, சனிக்கிழமை ஆகும்.

திருவாதிரை நட்சத்திரமானது நேற்று ஜனவரி 02, இரவு 08:04 மணிக்குத் தொடங்கி, ஜனவரி 03, மாலை 05:27 மணி வரை நீடிக்கும்.
மேற்கண்ட நேரத்தில் ஆருத்ரா தரிசனம் செய்வதன் மூலம், சிவபெருமானின் அருளைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

திருவாதிரை என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. இது நம் முன்னோர்களின் நம்பிக்கைகள், கலாச்சாரம் மற்றும் ஆன்மிக வாழ்வு ஆகியவற்றை இணைக்கும் ஒரு பாலமாகும். இந்த விழா நம்மை ஒற்றுமையாக இணைத்து, நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல உதவுகிறது. திருவாதிரை கொண்டாட்டம், அன்பு, பக்தி, ஒற்றுமை மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கும் ஒரு சிறப்பு நிகழ்வாகும்.

மார்கழி மாதத்தில் வரும் இந்தத் திருநாள், நட்சத்திரங்களில் ஆறுதிரை (ஆருத்ரா) நட்சத்திரத்துடன் தொடர்புடையதாகும். 
திருவாதிரை என்பது ஆன்மிக விழாவாக மட்டுமல்ல, குடும்பம் மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்தும் நாளாகவும் விளங்குகிறது. குறிப்பாக பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து, சிவபெருமானை வழிபட்டு, குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். இல்லங்களில் “களி” மற்றும் “ஏழு கறி கூட்டு” போன்ற பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்படுவது திருவாதிரையின் தனிச்சிறப்பாகும். இவை இயற்கையுடனான ஒற்றுமையையும், சமநிலையான உணவுமுறையையும் எடுத்துக்காட்டுகின்றன.
இந்தத் திருநாள் தமிழர் பண்பாட்டின் ஆழத்தையும், ஆன்மிக சிந்தனையின் உயரத்தையும் வெளிப்படுத்துகிறது. திருவாதிரை வழிபாடு மனிதனுக்குள் உள்ள அகந்தையை நீக்கி, சுயஞானத்தை வளர்க்கும் என சைவ சித்தாந்தம் கூறுகிறது. சிவபெருமானின் தாண்டவம், மனித வாழ்க்கையில் மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதையும், அந்த மாற்றங்களை அருளோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில், திருவாதிரை போன்ற விழாக்கள் நம்மை நமது பண்பாட்டு வேர்களுடன் இணைக்கின்றன. ஆன்மிக அமைதி, குடும்ப ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்க்கும் இந்தத் திருநாள், தலைமுறைகள் கடந்தும் தமிழர் வாழ்வில் ஒளி வீசும் விழாவாகத் திகழ்கிறது.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்

 



இலங்கையில் பாடசாலை நேர மாற்றம் அல்லது நேர நீடிப்பு என்பது இன்று ஊசலாடும் நிலைக்கு வந்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே வேளை அரசாங்கம் பாடசாலை நேர நீடிப்பை வாபஸ் பெற வேண்டும். இன்றேல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்க வேண்டி நேரிடும் என அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்து ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை  வரை கால அவகாசம் கொடுத்துள்ளது.

பொதுவாக நோக்கினால் பாடசாலை நேரத்தை அரை மணிநேரம் 

அதிகரித்தால் முழு கட்டமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். 

அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தவும்வேண்டும் என்பதே சகலரினதும் எதிர்பார்ப்பாகும்.

அண்மையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய சென்ற இடமெல்லாம் கல்வி சீர்திருத்தம் மற்றும் பாடசாலை நேர மாற்றம் தொடர்பிலேயே உரையாற்றியிருந்தார்.

குறிப்பாக பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் எவ்வித பிரச்சனைகளும் தோன்றவில்லை என் பிரதமர் கூறியிருந்தார். மறுகணம் தொழிற்சாலைகள் அதற்கு பதிலாக நாம் எழுத்து மூலம் அரசுக்கு தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளன.


இந்த நிலை ஆரோக்கியமான ஒன்றல்ல.

அரசும் தொழிற்சங்கங்களும் விடாக்கொண்டன் கொடாக்கண்டன் நிலையில் இருந்து விடுபட்டு இதற்கு நியாயமான தீர்வு காண வேண்டும். 


பாடசாலை என்பது தனி ஒரு கல்விச் சமூகத்துடன் சம்பந்தப்பட்டதல்ல. பல சமூகங்களுடன் தொடர்பு பட்டவை. கல்வி அமைச்சு போக்குவரத்து துறை மட்டுமல்ல குடும்பம் என்பதால் சகல துறைகளிலும் சம்பந்தப்பட்டது பாடசாலை ஆகும்.

எனவேஅரசு கல்விச் சமூகம் மற்றும் பாடசாலை சார்ந்த சமூகங்கள் எதிர்நோக்கும் சவால்களை கருத்திற்கொண்டு முறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அரசின் தீர்க்கமான முடிவு!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாங்கள் நிபுணர்கள் அல்ல; தேசிய கல்வி நிறுவனமே சீர்திருத்தங்களை வடிவமைக்கும். அதன் கொள்கைகளை மாற்ற முடியாது. ஏற்கனவே செலவு ஒதுக்கப்பட்டுள்ளது.' என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.

முதலில் ஒரு பாட நேரத்தை ஒரு மணிநேரமாக நீடிக்கவிருந்தது. ஆனால்இ ஒரு பாட நேரம் 50 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது. இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள் தேசிய கல்வி நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம்இ இந்தச் சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (30 நிமிடங்கள் அதிகரிப்பு) நீட்டிக்கப்படவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் இந்த புதிய கால அட்டவணையை எதிர்த்து வருகின்றன. எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிக்குள் அரசாங்கம் முன்மொழியப்பட்ட கால அட்டவணையைத் திருத்தாவிட்டால்இ புதிய பாடசாலைப் பருவம் தொடங்கும் போது ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் எச்சரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சாதக பாதகங்கள்! பாடசாலை நேரத்தை அரை மணிநேரம் 

அதிகரித்து பிற்பகல் 2 மணிவரை நீடிக்கஉள்ளது. இந்நிலையில் இந்த அரை மணிநேரநீடிப்பால்இ பல துறைகளைச் சேர்ந்தவர்களும் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுக்கநேரிடும்.பாடசாலைகளுக்குச் சென்று 

திரும்புவதற்கு பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவோர்இ 

பாடசாலை வாகனங்களைப்பயன்படுத்துவோர் மேலதிகமாக அரை 

மணிநேரம் காத்திருக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் 

என்றால் தங்களுடைய மதிய உணவு நேரத்தில் பிள்ளை வீட்டுக்கு அழைத்துச்

சென்று விடுதல் பாதிக்கப்படும்.அதுமட்டுமன்றிஇ ரயில்களில் பயணிக்கும் 

ஆசிரியர்கள் மாணவர்களும் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்படும். ஆகையால்தான் போக்குவரத்துக்குத் 

தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைகள் 

மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் பாடசாலை நேரத்தை30 நிமிடங்கள் நீடிக்க நடவடிக்கைஎடுத்தால் அதற்கான நியாயமான சம்பளஉயர்வும் வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.தற்போதைய பாடசாலை நேரம் 

நீடிக்கப்படும் என்று கூறுவதன் மூலம் அவர்களுக்கு அதிக கடமைகள் மற்றும் 

பொறுப்புகள் வழங்கப்படும் என்று சுட்டிக்காட்டும் ஆசிரியர்கள்இ 

அவர்களுக்கு ஒதுக்கப்பட்டபொறுப்புகளை நிறைவேற்றுவதில்

நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

'கற்பித்தல் நேரத்தை நீட்டிப்பதன்மூலம் முன்மொழியப்பட்ட திட்டத்தின்மூலம் அவர்கள் சில உற்பத்தித்திறனைஎதிர்பார்க்கிறார்கள். பாடசாலை நேரம் 

ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்படும் என்று கூறுவதன் மூலம் 

ஆசிரியர்கள் மாதத்திற்கு இருபது சேவை நாட்களை உள்ளடக்கும்போது மாதத்திற்குக் கூடுதலாக பத்து மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த வழியில் இது ஆசிரியர்களின் சம்பளத்தில்நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.' என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

அதுமட்டுமன்றி பாடசாலை நிறைவடைந்து மேலதிக வகுப்புகள்இ 

தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களும் பெரும் சிரமங்களுக்கு 

முகங்கொடுக்கவேண்டிய நிலைமைஏற்படும். ஆகையால்இ பாடசாலை 

நிறைவடைந்து இன்னும் இரண்டொரு மணிநேரத்துக்குப் பின்னரான பயண

ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் போக்குவரத்தை

மறுசீரமைக்கவேண்டும்.தேவேளை பெரும்பாலான அரச 

பேருந்துகள்சீருடைகளில் நிற்கும் மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை. 

அத்துடன் பல தூரபிரதேசங்களில் அரச பேருந்து போக்குவரத்து ஒழுங்குமுறையில்இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. 

குற்றச்சாட்டுகள் என்பதை விட அதுதான் உண்மையாகும். 

ஆகையால் அந்த பிரச்சினையையும் நிவர்த்தி செய்ய வேண்டும்.

வருவது உயர்தர பரீட்சை. அடுத்து ஜனவரியில் பாடசாலைகள் ஆரம்பமாகும்.

எனவே அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பு ஆகும்.


வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா 

காரைதீவு 



 


இலங்கை எனும் திருநாட்டின் ஆன்மீக வரலாற்றில் பல இடங்கள் சிவபூமியாகஇ இறைவனின் ஸந்நிதியோடு இணைந்துபோன புனித தலங்களாக கருதப்படுகின்றன. அதுபோன்று, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள குருமண் வெளி எனும் கிராமம் ஒரு பரிசுத்தமான பூமியாக எண்ணப்படுகிறது. சீர் பாத குலத்தினரால் பராமரிக்கப்பட்டு வரும் ஸ்ரீ மகாவிஷ்ணு மற்றும் ஸ்ரீ நாகதம்புரான் ஆலயங்கள், இப்பகுதியில் உள்ள ஆன்மீகத் தூண்களாக விளங்குகின்றன.

இவ்வாலயங்களில்  நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா, ஆன்மீக உலகையே அதிர வைத்த அதிசயங்களுடன் நிறைந்தது. காலச் சுழற்சியில் அரிதாகவே நிகழும் இத்தகைய அற்புதங்கள், இறைவனின் செயற்பாடுகள் காலத்தின் எல்லைகளை கடந்தும் நிகழும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தன.

ஆலய வரலாற்றுப் பின்னணியை நோக்குகின்ற போது


கட்டுமாவடி கலிங்கநாடு திருவெற்றியூர் தலப்பாக்கட்டுப் பிராமண வம்சத்து குருமாராம்சீர்பாத குலத்தோர் புகழ் பூக்க வாழ்ந்து கொண்டிருக்கின்றதிருப்பதியாம் குருமண் வெளி எனும் கிராமம், தெய்வீக ஆசியுடன் அமைந்த, பண்பாட்டு பாரம்பரியத்தையும் ஆன்மீக ஒளியையும் உற்சாகமாக தாங்கி நிற்கும் ஒரு புண்ணிய நிலமாகும். கிராமத்தின் மேற்குத்திசையில்  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மாரியம்மன் ஆலயம் என்பன அருள்பாலித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை வடக்கே பத்திரகாளியம்மன் அதேபோல் கிழக்கே ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம்இ ஸ்ரீநாக தம்பிரான் ஆலயங்கள் காலத்தின் சுவடுகளை தாங்கியதுடன், பக்தர்களுக்கு கருணை சுர ந்துஅருள் பாலிக்கும்இடங்களாக விளங்குகிறது.

ஸ்ரீமகாவிஷ்ணு ஆலயமானது  நாராயணன்

 தன் வாகனமான கருட பகவானுடன் நிலவின் மெல்லிய ஒளியிலும், பக்தியின் தீவிரமாகிய தீப ஒளிக்குள் விளங்கும் தெய்வீக பிம்பம் அடிக்கடி இவ்வாலய பிரதேசத்தில் உருவாகுவதும் கிராமத்தில் இறை அருள் நிறைந்திருப்பதை எடுத்துக்காட்டுகின்றது.

அதேபோன்று, அருகிலுள்ள ஸ்ரீ நாகதம்புரான் ஆலயம், நாக சக்தியின் முழுமையான வடிவமாக கருதப்படும் நாக தேவர்கள் தங்கிய தலம் என எண்ணப்படுகிறது. பசுமை நிறைந்த குளங்களும், நாக புட்பங்களும் சூழ்ந்த இந்த ஆலயம்இ பண்டைய நாக நாடு மரபுகளின் பசுமைத் தடம் போல் விளங்குகிறது.

இக்கிராமத்தில் புகழ் பூத்து விளங்குகின்ற அற்புதங்கள் பல நிறைந்த ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் 28 6 2025 அன்று ஆரம்பமாகி மிக விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பல்வேறுபட்ட அற்புதங்களை மக்கள் கண்ணூடாக கண்டு கழித்தது கிராமத்தின் தெய்வ சக்தி நிறைந்த தன்மையை எடுத்துக்காட்டுகின்றதுஅந்த வகையில் மகா கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற்ற வேளையில் இவ்வாலயத்தில் நிகழ்ந்த அதிசயங்களை பின்வரும் விடயங்கள் ஊடாக நோக்குவோம்

 இக் கும்பாபிஷேக விழா, பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட  நீடித்த ஒரு பாகவத அனுபவமாக அமைந்தது. நாட்டின் பல பாகங்களிலிருந்து திருந்தொண்டர்கள், வேத மந்திர சத்தங்களோடு சன்னிதிக்கு வந்தனர். வேதிகளின் முழக்கம், பஜனைகளின் இசை, திருவிழா பல்லக்கு ஊர்வலங்கள் ஆகியவை பக்தர்களை பரவச நிலையில் அழைத்தன.

கும்பாபிஷேகத்தின்போது,சீதேவி பூதேவி ஆகிய அம்மை களுக்கும்  பெருமாளுக்கும் விதிக்கிணங்க திருக்குட மூர்த்திகள் அமைக்கப்பட்டு, தூய நீருடன், வேத மந்திரங்களோடு கலசபூரணங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தநிகழ்வில் பங்கேற்ற அனைவரும் உணர்ந்த அந்த ஆனந்த அனுபவம்இ வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவிற்கு உயர்ந்தது.

அந்த வகையில்

கருட பகவானின் வானதிசை அற்புதம்

மகாவிஷ்ணு ஆலயத்தில் குடமுழுக்கு நிகழ்வின் முரசம் ஒலித்த தருணத்தில், திடீரென வானில் வட்டமிட்டபடி ஒரு தீவிர ஒளிக்கதிருடன் கருட பிம்பம் தோன்றியது. அது மெல்ல ஆலயத்தின் விமானத்தில் அமர்ந்தது போலும்இ பின் மறைந்து விட்டது.

இந்த நிகழ்வை நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேரில் பார்த்ததோடுஇ சிலர் தங்களின் கைபேசிகளில் அதை படம் பிடித்திருந்தனர். அந்தக் காட்சிஇ ஒரு சாதாரண பறவை அல்ல என்பதையும்இ அதில் இருந்த ஒளிக்கதிரும் வடிவ விளக்கமும்இ கருட பகவானின் தெய்வீக திருவுருவம் என்பதை உறுதி செய்தன.,

இந்த நிகழ்வு, விஷ்ணுபக்தர்களின் மனங்களில் ஆழ்ந்த அன்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. சிலர் அந்த தருணத்தில் கண்களில் தானாக கண்ணீர் வருவதாகவும், சிலர் சிறப்பான திருவிழாவின் பாதிப்பில் மயக்கமடைந்ததாகவும் தெரிவித்தனர்.

மற்றும்இதன் பின்பு நடைபெற்ற ஸ்ரீ நாகதம்புரான் ஆலய குடமுழுக்கு நிகழ்வின் போது, மிகவும் அதிசயமான இன்னொரு நிகழ்வு நடந்தது. கலசநீரை மூர்த்திக்கு அர்ப்பணிக்கும் நேரத்தில், ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள நாகஸ்தானம் பகுதியில் இரு நாகங்கள் தோன்றின.

அவை ஒரு சில நொடிகள் தோன்றிஇ பின்னர் சாமியார்களாலும்இ பக்தர்களாலும் 'நாக தேவர்கள் வந்திருக்கிறார்கள்!' என கூச்சல் எழுந்தது. அந்த நாகங்கள் அமைதியாக அருகில் உள்ள மரத்தடியில் நுழைந்து மறைந்தன. இது பிறவியிலே அரிதாகக் காணப்படும் தெய்வீக சாட்சி என்று உணர்ந்த அனைவரும் நிலைதவறியபடி நமஸ்காரம் செய்தனர்.மற்றும்

அன்பும் அனுபவமும் உருக இது பற்றி பக்தர்கள் உரைத்த உணர்வுகள்மேலானது

இந்த நிகழ்வுகளுக்கு பின், பக்தர்களிடையே ஆன்மீக உற்சாகம் எழுச்சி பெற்றது. என சிலர்கூறினார்கள்அவற்றுள் சில கருத்துக்களாக

'நான் இந்த நேரத்தில் இருந்தது என் வாழ்க்கையின் பெரிய பாக்கியம்.'

'கருட பகவான் வானத்தில் தோன்றியதும் என் உடல் சிலிர்த்தது.'

'இது வரலாற்றில் அரிதான நிகழ்வு – நாக தேவதைகள் நேரில் வந்ததை நாங்கள் கண்டோம்!'

இவ்வாறெல்லாம்

பிறர் பேசியதுஇ இந்த கும்பாபிஷேக நிகழ்வின் போது ஏற்பட்ட அற்புதங்கள், ஒரு தர்ம நிலைப்பாட்டுக்கு உருவான ஒரு சாட்சி எனவே கருதப்பட்டது.

அதிசயங்களின் பொருள் மற்றும் நவீன கால உணர்வியல்என்பனவும் இந்நிகழ்வை உண்மையான பக்தி அனுபவம் என உறுதிப்படுத்தி கூறுகிறது அந்த வகையில்

ஆன்மீகம் என்பது காலங்களைக் கடந்து உருக்குலைந்த உணர்வாக இல்லாமல் தொழில்நுட்ப உலகிலும் மீளாய்வுக்குட்பட்ட உண்மையாக இருக்கிறது. வானில் கருட பகவான் தோன்றிய நிகழ்வும், நாகங்கள் தோன்றிய தருணமும்,சிலரால் 'மாயை', 'அவதான பிழை' எனக் கருதப்பட்டது. ஆனால் நிகழ்வின் நேர்மையான சாட்சிகள், காணொளிகள்இ மற்றும் அந்த தருணத்தில் ஏற்பட்ட ஆன்மீக அதிர்வுகள், இவை அனைத்தும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது, அதனை ஒரு தெய்வீக செயலாக்கம் என உறுதிபடுத்துகின்றன.என்று இக்கு கும்பாபிஷேகத்தை தலைமை தாங்கி நடாத்திய இவ்வாலயத்தின் பிரதம குருவும் 50 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித ஊதியமும் எதிர்பார்க்காமல் இவ்வாலயத்துக்காக த ன்னையே அர்ப்பணித்த வணக்கத்துக்குரிய சிவஸ்ரீ திரு வராகமுத்து யோகராஜா குருக்கள் அவர்களும் அவருடைய இரு புதல்வர்களான சிவஸ்ரீ  யோகராஜாருத்திரன் ஷர்மாசிவ ஸ்ரீ ஜோகராஜா சனாதனன் சர்மா  ஆகிய இவ்வாலயத்தின் குருமார்களும் எடுத்துரைத்தது எல்லோர் மனதிலும் எம் பெருமானின் பக்தி பெருக்கை ஏற்படுத்தியது.

குருமன் வெளி கிராமம்,இம்மாபெரும் கும்பாபிஷேக நிகழ்வினால்  மேலும் புகழ்பெற்றது. இந்த தெய்வீக நிகழ்வுகள்மனித இனம் தங்கள் பாவங்களை அகற்றி, தங்கள் உள்ளத்தை தூய்மைப்படுத்தி, இறைவனை அடைய வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றன.

இவ்வாறான ஒரு அரிய கும்பாபிஷேக நிகழ்வில் நிகழ்ந்த அதிசயங்கள், எத்தனை நூற்றாண்டுகளாகவே ஆன்மீக வழிபாட்டின் அடையாளமாகவும், இறைவனின் அற்புதங்களை நமக்குள் உணர்த்தும் உயர்ந்த அச்சமுள்ள அன்பின் அழைப்பாகவும் திகழுகின்றன.

அன்பஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ நாகதம்பிரான் பக்தர்களே இம்மகத்தான கும்பாபிஷேக நிகழ்வில் தங்களால் கலந்து கொள்ள முடியாமல் போயிருந்தால் கூட தற்பொழுது மண்டலபிஷேகம் 48 நாட்களுக்கு மிக விமர்சையாக அற்புதமான முறையில் அன்னதானங்கள் அலங்கார நிகழ்வுகள் அன்பு நிறை பேச்சுக்கள் பிரசங்கங்கள் மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் என்பன இடம்பெற்று மண்டலாகு சிகத்தை சிறப்பித்துக் கொண்டிருக்கின்றன எனவே இம்மண்டலம் சேகத்தில் கலந்து கொண்டு எம் பெருமானின் நேரடி தரிசனத்தை கண்டு களிப்பதோடு தங்களுடைய சஞ்சித வினையிலிருந்து தானாக ஈடேற்றம் வருமாறு அன்புடனும் அரவணைப்புடனும் ஆதரவுடன் இந்து பெரும் பெருமக்களை கேட்டுக் கொள்கின்றனர்குறுமண்வெளிஆதிசேடன் கலைக்கழகத்தினரும் ஆலய தொண்டர்களும்

ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ நாகதம்புரான் திருவடிகள் நமக்கெல்லாம் துணை புரியட்டு

              சுபம்

சோ .செல்வம்(அதிபர்)

மட்ஃ பட்ஃ குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயம்

குருமண்வெளி.



 


நவராத்திரி பண்டிகை புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை கொண்டாடுகிறோம்.

 இந்த ஆண்டு ஐப்பசி மாதம் முதல்நாள் அக்டோபர் 03ஆம் தேதி இன்று  வியாழக்கிழமை நவராத்திரி தொடங்குகிறது. ஒன்பது நாட்கள் அனுஷ்டித்து பத்தாம் நாள் 12 ஆம் திகதியன்று விஜயதசமியுடன் நிறைவடையும்.

 பிரதமை தொடங்கி தசமி வரை ஒன்பது இரவுகள் அம்பிகையை அலங்கரித்து சிறப்பாக வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

உலகத்தின் இயக்கத்திற்கு எல்லாம் சக்தி தான் ஆதாரம்.அந்த சக்தியை வழிபடுவதே நவராத்திரி திருவிழா. அம்மனை வழிபட்டால் அனைத்து ஆற்றலையும் பெறலாம். சக்தி இல்லை என்றால் இந்த உலகம் இயங்காது. அந்த சக்தியை வழிபடுவதற்காக உருவானதுதான் நவராத்திரி பண்டிகை. நவராத்திரி பண்டிகையின் ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் அம்மனுக்கு தினசரி ஒவ்வொரு வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.

அம்மனை சக்தி வடிவமாக இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளாக வழிபடுகின்றோம். வாழ்க்கையில் கல்வி செல்வம் வீரம் ஆகிய மூன்றும் முக்கியம். மூன்றும் கலைமகள், அலைமகள், மலைமகள் என மூன்று சக்திகளை வழிபடுகின்றோம். வாழ்க்கையில் மூன்றும் முக்கியம். வீரத்திற்கு மூன்று நாட்கள், செல்வத்திற்கு மூன்று நாட்கள், கல்விக்கு மூன்று நாட்கள் ஒதுக்கி ஒன்பது நாட்கள் வழிபடுகின்றோம். இதன் மூலம் நமக்கு சக்தி கிடைக்கும் அந்த சக்தியை நாம் நல்ல விசயத்திற்காக பயன்படுத்த வேண்டும்.

பிரதமை நவராத்திரியின் முதல் நாளில் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இன்றைய தினம் மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.

துவிதியை இரண்டாம் நாள் தேவி கவுமாரி தேவியாக போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும். 

திரிதியை மூன்றாவது நாளுக்கு உரிய வாராகி அன்னை, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

சதுர்த்தி நான்காம் நாளில் அருள்பவள் மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

பஞ்சமி ஐந்தாம் நாளில் அன்னையை வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் இவளுக்கு ஏற்றவை.

சஷ்டி ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம் இந்திராணி. சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. தேங்காய் சாதம் படைத்து வணங்கலாம். 

சப்தமி ஏழாம் நாளில் தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். இந்த அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து வழிபடலாம்.

அஷ்டமி எட்டாவது நாளில் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. இந்த நாளில் அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, சர்க்கரை பொங்கல் படையல் இட்டு வழிபடலாம்.

நவமி ஒன்பதாம் நாளில் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம். இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து

விஜயதசமி பத்தாவது நாள் விஜய தசமி. விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.

விரத பலன் நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு என்றாலும் அதில் விசேஷமான நாட்கள் கடைசி மூன்று நாட்கள். சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும். இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும். நவராத்திரி விரதம் இருப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்ல பயன் அடைவார்கள். இந்த ஆண்டு தீமைகள்  ஒழிய அம்பிகை அருள் புரிய வேண்டும் என்று அனைவரும் வேண்டிக்கொள்வோம்.

நவராத்திரி கொலு

நவாத்திரி பொம்மைகளைச் செய்ய, ஒரே கழிமண் மூலப்பொருளாகிறது. ஆனால் கிருஷ்ணராகவும், ராமராகவும், முருகனாகவும், சிவனாகவும், அம்பாளாகவும் பல பொம்மைகள் ஒரே மண்ணில் உருவாகிறது. பரப்பிரமம் பலவகை வடிவங்களை எடுத்து நம்மைக் கரையேற்றுவதை நவராத்திரிக் கொலு உணர்த்துகிறது.

அப்படி மகத்தான நவராத்திரி விரதத்தை நாமும் அனுஷ்டித்து வாழ்வில் வளம் பெறுவோமாக..

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா 
காரைதீவு 

 


 

ஒன்றாக பள்ளி சென்று வீடு திரும்பி, மாலையில் ஒன்று கூடி விளையாடி மகிழ்ந்திருந்த சகபாடி சூழல் நம் தலைமுறையோடு முடிவு கண்டு விட்டது. கல்வியின் அடிப்படை தனிமனித நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அந்நடத்தை ஒரு சமூக வெளிப்பாடாகவே அமைய வேண்டும். ஆனால் இன்றைய நம் கல்வி முறைமை எந்த அளவிற்கு சமூகமய தலைமுறையொன்றை உருவாக்குகிறது என்ற வினா இக்கட்டுரைக்கான அடிப்படை எனக் கொள்வோம். பெற்றோர், குடும்பம், ஆசிரியர், பாடசாலை என்ற கட்டமைப்பை கடந்து பிள்ளைகளை சமூக மயப்படுத்துவதில் சம வயது சகபாடிகளின் பங்கு பெருந்திரளானது என்பதே உண்மை.
சிறந்த சித்திகளைப் பெற்று உயர் பட்டம் பெற்றவர் சக மனிதர்கள், சக இனத்தவர், கலாச்சாரத்தவரை மதிக்க தவறி சுயநல நோக்கோடு செயல்படுவாரெனில் அவர் பெற்ற கல்வியின் பூரண தன்மை கேள்விக்கிடமாகின்றது. சிறந்த சமூக நடத்தை, ஆற்றல், பற்று உள்ள ஒருவர் கல்வி கட்டமைப்பில் சரிவர சித்தி பெற தவருகிறான் எனில் அங்கு அவருக்கு வழங்கப்பட்ட கல்வியே கேள்விக்கிடமாகின்றது. இந்த சமூகமயமாக்கல் மற்றும் கல்வி சமநிலையின்மையே நம் நாட்டு அனேகமான பிரச்சனைகளுக்கு அடிப்படையாக உள்ளது.
குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் கல்வி முறையில் ஆளுமை, திறமை, பற்றி  என்பவற்றை கொண்ட சமூகத்தை காட்டிலும் பந்தய குதிரைகளே பழக்கப்படுத்தப்படுகின்றனர். துரதிஷ;டம் எங்கு பந்தயத்தில் தோற்றுப் போகும் குதிரைகளை விட இடையில் வழிதடுமாறி இடை நின்ற குதிரைகளே அதிகம் என்பது தான்.
'தனிநபர்கள் தான் சார்ந்த சமூகத்தின் கலாச்சாரத்தை கற்றறிந்து கொள்கின்ற செயல்முறையே சமூகமயமாக்கல். சமூகமயமாக்களுக்கு உட்படுத்தப்படாத எவரும் அவர் வாழுகின்ற சமூகம் விதித்த நியமனங்களுக்கு ஏற்ப இயல்பான மனிதராக கருதப்பட மாட்டார். ' என்ற ர்யசய டயஅடிழளஇ ர்ழடடிழசn (1990) புகழ்மிக்க  அறிஞர்களின் கருத்தை நான் இங்கு முன்மொழிகின்றேன்.
நாம் பெற்று வளர்க்கும் நம் பிள்ளைகளை சமூகமயமாக்கம் செய்வதில் குறிப்பிட்ட வயதிற்கு மேல் நம்மை காட்டிலும் சம வயது சக பாடிகளினது  பங்கு அதிகமானது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னிருந்த சகபாடி சூழலும் தற்போதுள்ள சகபாடி சூழலும் முற்றிலும் வேறுபட்டது. இது தொடர்பாக போதுமான விளக்கம் இன்மையினாலேயே இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளின் சம வயது சகபாடி உறவிற்கு முட்டுக்கட்டையாக செயல்படுகின்றனர்.
இங்கே நம் பாடசாலை பிள்ளைகளை நான் ஒரு தொகுதிகளில் வைத்து பார்க்க விரும்புகிறேன். ஒன்று சுதந்திர செயல்பாடுடைய பெற்றோரின் மிதமிஞ்சிய கட்டுப்பாட்டிற்கு உட்படாத பிள்ளைகள். மற்றொன்று பெற்றோரின் கடும் கண்காணிப்பில் மிதமிஞ்சிய அரவணைப்பில் வளரும் பிள்ளைகள். இதில் இரண்டாம் வகைப்பிள்ளைகள் கற்றல் செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டாலும் சமூகம் சார் புரிதல் இன்றி பிற்காலத்தில் சமூகத்திற்கு முகம் கொடுப்பதில் சிரமப்படுவதை காண முடிகிறது.
நம் பிள்ளைகள் சம வயது சகபாடிகளை சந்திக்கும் பிரதான இடம் பாடசாலை ஆகும். ஆனால் அங்கு பொதுவான உடை, நடத்தை, ஒழுக்கம் என ஒரு கட்டுப்பாடு பேணப்பட்டாலும் கூட தற்கால நடைமுறையில் பிள்ளைகள் பிரத்தியேக வகுப்புகள், தான் சார்ந்த சமூகம், ஊடகங்கள் என பரந்த அளவில் சகபாடிகளின் உறவை கட்டமைத்து கொள்கின்றனர். குறிப்பிட்ட வயதுக்கு மேல் பிள்ளைகள் பெற்றோர், சகோதரர், ஆசிரியர்களை காட்டிலும் சம வயது சக பாடிகளிலேயே அதிக நம்பிக்கை கொள்கின்றனர். காரணம் தாம் சார்ந்த ஒத்த சிந்தனை, ஒத்த செயல்பாடு, எதிர்பார்ப்பு, விருப்பு வெறுப்பு, ஆர்வங்கள், நடத்தை என்பன சம வயது சதபாடிகளிடமே சரளமாக கிடைத்தலாகும். அதீத சுதந்திர உணர்வு, கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படாமை, புதுமை நாட்டம் போன்ற மனநிலைகள் கட்டளைமைப் பருவ மாணவர்களின் பொதுவான இயல்பாகும். இதற்கு      சமவயது சதபாடிகளின் கூட்டுணர்வு பக்கபலம் சேர்க்கின்றன.
நம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்நிலையினை கையாள்வதில் நடைமுறை சிக்கல்களை சந்திக்கின்றனர். அதீத கட்டுப்பாடுகளை விதித்து யாருடனும் பழகவிடாமல் கற்றல் செயல்பாடுகளுக்கு மட்டும் பிள்ளைகளை மட்டுப்படுத்தியும், அதேவேளை கண்காணிப்பற்ற சுதந்திரத்தை வழங்கி தவறான வழிகளில் பிள்ளைகள் செல்வதையும் அவதானிக்காத அலட்சியமான போக்கினையும் நம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டிருப்பதால் பொதுக் கண்ணோட்டத்தில் பார்க்கையில் நம் மாணவ சமுதாயத்திற்கு சம வயது சசபாடிகளின் உறவு என்பது எதிர்மறையானதாக தென்படலாம். ஆனால் இது சற்று நுணுக்கமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், சாதனைகளை படைக்கவும், சமூக உணர்வு, ஒற்றுமை,  தேசப்பற்று, சக சமூகங்களை இனங்காணல், சமூக பேதங்களைக் கடந்து நட்பு, உறவு, நம்பிக்கை போன்ற நிலைகளை அடைவதற்கு சம வயது சகபாடிகளின் உறவு ஒவ்வொரு பிள்ளைக்கும் அத்தியாவசியமானது. யாருடனும் பழகாது தனித்துவிடப்பட்ட ஒரு மாணவன் கற்றல் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படுவான் ஆயினும் மாணவனின் உளவியல் நிலை குறித்து ஆராயுமிடத்து சிறந்த சமூகமயமாக்கப்பட்ட மாணவனாக அம்மாணவன் இல்லை என்பது புலப்படும்.
சகபாடிகளின் இன்றைய உறவாடல் நிலை முற்றிலும் மாறுபட்டுவிட்டது. றூயவள யிp குழுமங்களுக்கும், குயஉநடிழழம Pழளவஇ வுமைவழம சுநநடள என இன்றைய மாணவர்களின் நட்பு வட்டாரம் துரிதமாகிவிட்டது. நம் மாணவர்களின் உடை அலங்காரம், தலைமுடி வெட்டுதல், தன்னை மற்றவர் முன்னிலையில் முன்னிறுத்துதல், மொழிநடை, சிந்தனை, மனப்பாங்கு, மற்றவரை அணுகுமுறை, சமூக செயல்பாடுகள் என அனைத்தையும் சமவயது சகபாடிகளே தீர்மானிக்கின்றனர்.
நடைமுறையில் வளர்ந்து விட்ட ஊடக கலாச்சாரம், சமூக வலைதள பாவனை, பிரத்தியேக வகுப்பு கலாச்சாரம் என்பன நகர்புற மாணவ சமூகங்களை அதிகமாக பாதித்துள்ளன. அண்மைக்காலமாக நாம் கேள்விப்படும் சில சம்பவங்களை சிந்தித்து பார்ப்போம். மாணவரை கண்டித்த ஆசிரியரை மாணவர் தாக்கியமை, பள்ளி இறுதி நாளில் பாடசாலை பொருட்களை சேதப்படுத்தியமை, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் உலா வரும் பாடசாலை மாணவர்களின் சீர்கேடான காணொளிகள், தொலைபேசி மறுக்கப்பட்டமைக்கு கொண்டமைக்கு தற்கொலை செய்து கொள்ளுதல், காதல் தோல்வி மன அழுத்தம் போன்ற வயதுக்கு ஒவ்வாத காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்ளுதல், சமூகவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுதல், போதை பொருளுக்கு அடிமையாகுதல் மற்றும் போதை பொருள் பாவனை, வாழ்க்கை சூழலுக்கு பொருத்தமற்ற உடல் அலங்காரங்களை செய்து கொள்ளுதல், எதிர்காலம், எதிர்கால தொழில் இலட்சியம் போன்ற குறிக்கோள்கள் அற்று நடைமுறை சார்ந்த விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுதல் போன்ற பல்வேறு விடயங்களை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். இதற்கும் சம வயது சகபாடிகளின் பங்கு அல்லது போக்கு மிக மிக அடிப்படையாக அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக விரோத செயல்பாடுகள், போதைப்பொருள் பாவனை போன்றன மாணவர்களிடையே  கடத்தப்படுவதில் சம வயது குழுக்களின் பங்கு அதிகம்.  இதற்கு சமூக விரோதிகளின் செயல்பாடுகள் அடிப்படையாய் அமைந்தாலும் மாணவர் சமூகத்தில் பரவுவதில் சமவயது குழுக்களின் பங்கு அதிகமானது. இதற்கு சமவயது மாணவர்கள் இவ்வாறான பிழையான விடயங்கள் மீது கொண்டுள்ள பிரிய மனப்பாங்கு காரணம் எனலாம்.
அண்மையில் பிரபல சகோதரமொழி எழுத்தாளர் நம் பிள்ளைகளின் ஒழுக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டுமெனில் பாடசாலை விட்டபிறகு பஸ்தரிப்பிடங்களுக்கு வந்து பாருங்கள் என  தெரிவித்து இருந்தார். பாடசாலைகளை குறி வைத்துள்ள போதை வஸ்து, சமூக விரோத குற்ற செயல்களை தடுக்கவும் மாணவர்களை சமூக பற்றுள்ள ஒழுக்க விழுமிய நோக்குடைய பொறுப்புள்ள பிரஜைகளாக மாற்ற வேண்டும் எனில் சில உபாயங்களை நம் பெற்றோர்களும் பாடசாலை கட்டமைப்பும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
சமவயது சகபாடிகளின் உறவு நிலைகளை தடுப்பதால் தீர்வு இல்லை. சிறந்த நண்பர் வட்டாரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள பிள்ளைகளை வழிப்படுத்த வேண்டுமே அன்றி  நண்பர்களை நாமே தேர்ந்தெடுத்து கொடுக்கக் கூடாது. நண்பர்களுக்கிடையில் உள்ள நட்பு நிலையில் வெளிப்படை தன்மையை பேணும் வகையில் பிள்ளைகளிடையே நம்பிக்கையே வளர்த்துக் கொள்ள வேண்டும். கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஆசிரியர்களும் பாடசாலையும் சகபாடி கற்றல் உத்திகளை கையாள வேண்டும்
நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கலைத்திட்டம் மற்றும் கற்றல் செயற்பாடுகளில் மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த சிறந்த நோக்கு, ஒழுக்க விழுமியுங்கள், குறிப்பாக பாலியல் கல்வி, பொழுதுபோக்கு மற்றும் அழகியல் சார்ந்த கல்வி, தேசிய பற்று மற்றும் ஒற்றுமை போன்ற கருத்தமைவுகளை கொண்ட கல்வி முறைகளை செயல்படுத்த வேண்டும். அன்றி முன்பு குறிப்பிட்டது போல் பரீட்சையினை நோக்கமாகக் கொண்டு ஓட்டம் போடும் மாணவ சமூகத்தை பின்னின்று துரத்தும் கல்வி முறையாக தொடர்ந்து நீடிக்குமாயின்                  கல்வி - சமூகமயமாக்கல் என்ற இரு கருத்தாடல்கள் இடையிலான ஒரு பெரும் இடைவெளி நம் மாணவ சமூகத்தில் வெளிப்படும்.
மாணவப் பருவம் என்பது வாழ்வில் வண்ணமிகு பருவமாகும். இதில் முக்கிய வர்ணங்கள் நட்பு நிலையிலேயே தங்கியுள்ளன. அதனை வாழ்விற்கு சாதகமாக மாற்றும் திறமை அனைத்து பிள்ளைகளிடமும் உண்டு என்பதை எனது நம்பிக்கை. அதற்கு தகுந்த வழிகாட்டல்களை நம் பெற்றோர்களும் பாடசாலைகளும் வழங்கினாலே போதுமானது. இல்லையேல் கற்ற சமூகம் சமூக பொறுப்பின்றி சுயநலப் போக்கினையும், சமூகமயமாக்கம் பெற்ற சமூகம் கல்வியில் சிறக்க வழி இன்றி தவிப்பதனையும் என்ற இரு நிலைப்பட்ட பேதம் நம் சமூகத்தை தொடர்ந்தும் தேக்க நிலையிலே வைத்திருக்கும்.


சுபாகரன் சதீஸ்
4ம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவன்
கல்வி, பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

 



திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை(18) நடைபெறும்.

திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய ஆடி அமாவாசை உற்சவமானது எதிர்வரும் 2024.07.18 ஆம் தேதி வியாழக்கிழமை ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பித்து 2024.08.04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளது.

அவ் ஆலயம் தொடர்பான வரலாற்று ஆய்வு ரீதியான கட்டுரை இது..

உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனுமாகி
நிலவுநதி அரவுபுனை நிருமலனுமாகி
அலகிலா சோதியாய் அம்பலத்தாடும் அரனாரின்
நெற்றிவிழிப்பொறியின் உலகம்உய்ய வந்து
உதித்தவர் முருகப்பெருமான்

வெண்ணாவல் மரத்திலே வேல்வடிவாக முருகப்பெருமான்
வீற்றிருந்த திருத்தலம் திருக்கோவில் ஆகும்.
அந்தரத்து தேவர்களும் அனுபவித்த
விண்ணவரும் மண்ணவரும் வியந்துபோற்ற
வடக்குமுகமாகவிருந்த வேற்பெருமான்
தானாகவே கிழக்குமுகமாகத் திரும்பிய
புண்ணியபதி திருக்கோவில்.

ஆடிஅமாவாசை அன்று ஆறுமுகமோடு ஆழ்கடலில் தீர்த்தமாடி பிதிர்கடன் நிறைவேற்றும் கோவில்.

அன்று நாகர்முனை வெண்ணாவலம்பதி கந்தபாணத்துறை என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட திருக்கோவில் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

வரலாறு.

மட்டக்களப்பை பிரசன்னசித்து என்பான் ஆண்டகாலத்தில் கலிங்க குமரனான புவனேக கயபாகு தன் மனைவியுடன் மக்கட்பேறில்லாக் கவலையினால்  வாடித் தலயாத்திரை மேற்கொண்டு இராமேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் திருக்கோணமலை எனும் புண்ணிய பழம்பெரும் பதிகளைத் தரிசித்துவிட்டு நாகர்முனையிலிருக்கும் (தற்போது திருக்கோவில் ) வேற்பெருமானின் சிறப்பினை கேள்வியுற்று மட்டக்களப்புக்கு வந்தான்.

புவனேக கயபாகுவின் மனைவியாகிய தம்பதிநல்லாள் ஒரு சோழ அரசன் மகளாவாள்.
நாகர்முனையிலுள்ள சுப்பிரமணியர் ஆலயத்தை நல்லமுறையில் அமைத்தற்கு நல்லதொரு சந்தர்ப்பத்தை அவர்கள் வரவால் பெற்ற மட்டக்களப்பு மன்னனும் புவனேக கயபாகுவிற்கு தன் கருத்தைத் தெரிவித்து அவன் துணையை வேண்டினான்.
அதற்கிணங்கித் தம்பதி நல்லாளின் தந்தையான திருச்சோழனுக்கு புவனேக கயபாகு நல்ல சிற்பியர் முதலானோரை அனுப்பிவைக்குமாறு விட்ட ஓலையின்படி கைதேர்ந்த சிற்பநூல் வல்லார் பலர் நாகர்முனைத் துறைமுகத்தில் வந்திறங்கினர்.

சிற்பக்கலையின் சிறப்பை எடுத்து விளக்குவதான திருக்கோவிலின் திருப்பணியும் நன்முறையில் விரைவிலே நிறைவேறலாயிற்று.
மட்டக்களப்பிற் சிறப்புற எழுந்த முதலாவது பெருங்கோவிலாதலால் "திருக்கோவில்" என மன்னன் அதற்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தான்.(கி.பி.28)
மேலும் ஆலயத்தின் திருப்பணி வளர்ச்சிக்காய் மன்னன் பல ஏக்கர் வயல்நிலங்களைக் கொடுத்தான்.
அதற்கு நீர்ப்பாய்ச்சுவதற்காக ஒரு பெரிய குளத்தையும் சங்குமண்கண்டி (சங்கமான்கண்டி) மலைக்கு கீழ்ப்பால் அமைத்துக் கொடுத்தனர்.
மேலும் திருக்கோவிலுக்கு பக்கத்தில் ஒரு வாவியினைத் தன் தாயாகிய தம்பதிநல்லாள் நினைவாய் அமைத்து அதற்குத் தம்பதிவில் என்று பெயரிட்டனர்.
"வில்" எனும் சொல் மட்டக்களப்பில் குளத்தைக் குறிக்க வழங்குவதாகும்.
இக்குளத்தைச் சார்ந்த பகுதியில் அமைந்த ஊரும் "தம்பதிவில்" என இருந்து இன்று " தம்பிலுவில்" என்று மருவி வழங்கப்பெறுகிறது.

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமியின் அருளால் புவனேக கயபாகுவிற்குப் பிறந்த மகனான மேக வருணன் பின்னர் கி.பி.48 ல் உன்னரசக்கிரியின் ஆட்சிபீடமேறினான்.

"உன்னரசுக்கிரி" என்பது திருக்கோவிலின் தென்பாலுள்ள உகந்தைமலைக்கும் பாலர்நகைநாடு (பாணமை) என்ற பண்டைய துறைமுகத்திற்குமிடையே இருந்திருக்கின்றது. அதனாலும் வேறு சான்றுகளாலும் தற்காலம் சன்னியாசிமலை  என்ற பெயருடன் வழங்கப்படுகின்றது.

ஆலயங்களை அழித்த போத்துக்கீசர்..

 பிற்காலத்தில் போத்துக்கீசர் இலங்கையிலுள்ள பல நூற்றுக்கணக்கான ஆலயங்களை அழித்ததாக குவரோஸ் அடிகள் தனது நூலில் குறிப்பிடுகின்றார்.
போத்துக்கீச தேசாதிபதி அசவீடோ தகர்த்தெறிந்த ஆலயங்களுள் திருக்கோவிலும் ஒன்றாகும்.

திருக்கோவிலில் 3 கோபுரங்கள்  இருந்தன. என்றும் அவை மூன்றும் அசவீடோவினால் அழிக்கப்பட்டதாகவும் கூறுகிறார் குவரோஸ் அடிகளார்.

அதன்தொடர்ச்சியாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரார் கோயிலைத் தகர்த்தெறியும் நோக்கோடு சென்ற போர்த்துக்கீசர் அங்கிருந்த கருங்கல்லாலான நந்தி கோவில் பூசகரின் ஏவற்படி புல் தின்றதைக் கண்டு வியந்தவராய்த் தாங்கள் கருதியபடி அழிவுசெய்ய துணிவு பெறாது மீண்டனர் என்று ஒரு கதை கூறுகிறது.
அவ்வாறே மண்டூர்க் கந்தசுவாமி கோவிலை நோக்கிச் சென்ற போர்த்துக்கேயர் கோவில் வீதியை அடைந்ததும் கருங்குளவிகளாற் கொட்டப்பெற்றப்பெரும் பதைபதைத்து உயிருக்கஞ்சி ஓடினரென்றும் அவர்கள் ஓடும்போது அவசரத்தில் தமது துப்பாக்கிகள் வாள் ஈட்டிகள் என்பவற்றை விட்டுவிட்டுச்சென்றதாகவும் கூறப்படுகிறது. அவைகள் இன்றும் ஆலயத்தில் உள்ளன என்பது வரலாற்று உண்மையாகும்.

திருப்படைக்கோவில்கள் சில வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டவையாகும்.
வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், மண்டூர் முருகன் ஆலயம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் ,பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம், திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், மாமாங்கம் பிள்ளையார் ஆலயம் போன்றனவாகும்.

திருப்படைக்கோவிலான திருக்கோவில்  தேசத்துக்கோவிலாகும்.
அங்கு சில ஆசாரங்கள் நியமங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

ஆடிஅமாவாசைத்திருவிழா சிவராத்திரி பிள்ளையார் காப்பு கந்தபுராணம் படித்தல் சூரன்போர் திருவெம்பாவை போன்ற நிகழ்வுகள் வருடாந்தம் நடைபெறுபவை.
எனினும் சூரன்போர் மற்றும் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் என்பன குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவாறு வெகு சிறப்பாக நடைபெறும் சடங்குகளாகும்.

ஆடிஅமாவாசை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18 நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று இறுதியில் சமுத்திர தீர்த்தோற்சவம் நடைபெறுவது வழமையாகும்.

இம்முறை இத் திருவிழா 18 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது..எதிர்வரும் 04ம் திகதி ஆடிஅமாவாசை தினத்தன்று தீர்த்தோற்சவம் நடைபெறும்.

வரலாறு
மட்டக்களப்பு மான்மியக்குறிப்பின்படி சுப்பிரமணியருடைய ஆணைப்படி சூரனைக்கொன்று வெற்றியுடன் மீண்ட வேலானது உக்கிரத்தோடு வரும் வழியில் எதிர்ப்பட்ட வாகூர மலையை  இருகூறுகளாய் பிளந்தெறிந்து கடலில் மூழ்கியபின்னர் மூன்று கதிர்களைச் சிந்திச்சென்றதென்றும் வேலுருக்கொண்ட அக்கதிர்கள் மூன்றும் முறையே
உகந்தை மலை உச்சியிலும்
திருக்கோவிலில் ஒரு வெள்ளை நாவல் மரத்தின் மீதும்
மண்டூரில் ஒரு தில்லைமரத்தின் மீதும்
தங்கியிருந்தன என்றும் அவ்வவ்விடங்களில் வாழ்ந்த  மக்கள்( வேடர்கள்) வியப்புடன் நோக்கி கொத்துப் பந்தர்களால் ஆலயம் அமைத்து வழிபட்டனர் என்று கூறப்படுகிறது.

முதலிரு ஆலயங்களிலும் பார்க்க திருக்கோவில் ஆலயம் வரலாற்றோடு கூடுதல் தொடர்புடையதாயிருக்கிறது.

திருக்கோவிலில் வேடர்களால் இலைகுழைகளைக்கொண்டு முருகனுக்கு அமைக்கப்பட்டிருந்த கோயிலைத் தமிழரின் இரண்டாம்படை எழுச்சியின்போது வந்த சோழநாட்டு மன்னர் எழுவர் கல்லினாற்கட்டி முடித்தனரென்றும் வேடரது பந்தருக்குள் வடக்குமுகமாக வீற்றிருந்த வேலானது புதிய கற்கோயிலுட் கிழக்கு முகமாகத் திரும்பிவிட்ட காரணத்தினால் திருக்கோவில்(திரும்பிய கோவில்) என்று பெயரிட்டார் என்றும் திருக்கோவில் பற்றிய பதிகம் ஒன்று கூறும்.

திருக்கோவிலின் பழையபெயர் நாகர்முனை என்றும் கோவில் அமைக்கப்பட்ட பின்னர் அக்கோவில் சிறப்பால் இடப்பெயரும் "திருக்கோவில்" என மாறிற்று என்றும் அறிகிறோம்.

திருக்கோவிலுள்ள கல்வெட்டுக்களும் பட்டயங்களும் அதன் வரலாற்றைத் துல்லியமாக எடுத்துக்கூறவல்லன.

வன்னிமை வரலாறு 

அக் காலத்தில் கல்முனை கரவாகுபற்று தொடக்கம் பாணமை உகந்தை வரை வன்னிமை ஆட்சிக்காலம் நிலவியது.

அக்காலத்தில் எமது பிரதேசங்களை காலத்திற்கு காலம் பல சிற்றரசர்கள் ஆட்சிபுரிந்துள்ளார்கள். கிழக்கில் ஒவ்வொரு பிரதேசங்களையும் ஆளுகையாகக்கொண்டு பல சிற்றரசர்கள் ஆட்சிபுரிந்துள்ளார்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகள் இருக்கின்றன.

அந்தவகையில் கல்முனை கரவாகுப்பற்று தொடக்கம் அன்றைய நாகர்முனை என அழைக்கப்பட்ட இன்றைய திருக்கோவில் மற்றும் பாணமை உகந்தை வரை கல்முனையில் பழம்பெரும் கிராமமான நற்பிட்டிமுனையை மையமாகக் கொண்டு வாழந்த இரு வன்னிமை சிற்றரசர்கள் பரிபாலித்து வந்துள்ளனர்.

நற்பிட்டிமுனையில் வாழ்ந்த வன்னிமை சிற்றரசர்களான  சத்துருகப்போடி சின்னத்தம்பி(பதவிக்காலம்1902), சின்னத்தம்பி செல்லையா(பதவிக்காலம்1908இலிருந்து ) ஆகிய இருவருக்கும் அன்று பிரிட்டிஸ்காரர்கள் வழங்கிய அதிகாரம் தொடர்பான நியமனம் மற்றும் சிற்றரசர்களாக இருநது அவர்கள் ஆற்றவேண்டிய பணிகள் பற்றிய வரலாற்று ஆவணம் இன்றும் பாதுகாக்கப்பட்டுவருகின்றது.

இவர்களின் பரம்பரையினர் இன்றும் வாழ்ந்துவருகின்றனர். ஆலயத்தை பரிபாலித்து வருகின்றனர்.

 இது பாரம்பரியமாக மரபுரீதியாக நிருவாகக்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
செல்லையா வன்னிமை என்பார் சந்ததியே தலைமைப்பதவியை வகிக்ககூடியவர்கள் ஆவர். இது ஆலய யாப்பிலும் எழுதப்பட்டுள்ளது.
இங்குள்ள யாப்பு 1952ம் ஆண்டு எழுதப்பட்டவையாகும். அதற்கு முன்பு எழுதப்படாத யாப்பின் பிரகாரம் ஆலயம் நிருவகிக்கப்பட்டுவந்தது.

1952 இவ் முகாந்திரம் ச.வ.செல்லையா வன்னிமை தலைமையில் இவ் யாப்பு எழுதப்பட்டது.
அதன்படி 05 பேர் கொண்ட பஞ்சாயத்துசபை இருக்கும்.அச்சபையில்  தலைவர் செயலாளர்; கணக்குப்பிள்ளை வண்ணக்கர் மற்றும் பொருளாளர் இருப்பார்கள்.

அதில் தலைவராக வன்னிமை பரம்பரையைச் சேர்ந்தவர் இருப்பார்.அவர் கரைவாகுப்பற்று நற்பிட்டிமுனைப் பகுதியைச் சேர்ந்தவர்.யாப்பின்படி பெண்ணடி வம்சவரன்முறைப்படி தெரிவாவர்.செயலாளர் மற்றும் கணக்குப்பிள்ளை ஆகியோர் அக்கரைப்பற்றைச்சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.வண்ணக்கர் மற்றும் பொருளாளர் தம்பிலுவில்லைச் சேர்ந்தவராக இருப்பார்கள்.

இத்துடன் வட்டாரப்பிரதிநிதிகள் 20    பேர் இருப்பார்கள். இது நியதி.

இதேவேளை 28.12.1952 மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.அப்போதைய நீதிபதி என்.குணவர்த்தன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது
வழக்கு சமரசமாக தீர்த்துவைக்கப்பட்டது.

அதன்படி ஆடிஅமாவாசைத் தீர்த்தம் முடிவடைந்து மறுநாள் பஞ்சாயத்துசபை தெரியவேண்டும் எனவும் அதிலே வட்டாரப் பிரதிநிதிகளும் தெரிவாகவேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தலைவரானவர் கரைவாகுப்பற்று வன்னிமையின் செல்லையா வம்சத்து வம்சவரன் முறையிலமைதல் வேண்டும். அக்காலத்தில் செல்லையா வன்னிமை 05 ஆலயங்களை தனியாக நிருவகித்தவந்தார்.
பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம் ,பாண்டிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் ,நற்பிட்டிமுனை பிள்ளையார் ஆலயம், சேனைக்குடியிருப்பு காளி ஆலயம் மற்றும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் என்பனவே அவை.

அதன்பின்பு காலநேரவர்த்தமான சூழலுக்கு அமைய வன்னிமை வம்சவரன் முறையில்வந்தவர்கள் இவ்வாலயங்களை பரிபாலித்துவருகின்றனர்.

1952ம் ஆண்டு யாப்பின்பிரகாரம் முதல் பஞ்சாயத்துசபை தெரிவானது.
தலைவராக முகாந்திரம் ச.வ.செல்லையா
செயலாளராக சி.மானாகப்போடி
வண்ணக்கராக ஆ.தங்கராசா
பொருளாளராக க.ஆறுமுகம்
கணக்குப்பிள்ளையாக க.கந்தையா ஆகியோர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்கள்.

வட்டாரப்பிரதிநிதிகள் 30 வட்டாரங்களுக்கு தெரிவாக வேண்டுமென்று நீதிமன்று கட்டளையிட்டதால் பின்வருவோர் தெரிவானார்கள்.

பாணமை-எஸ்.டி.எம்.றெட்டறாள் பொத்தவில் - எஸ்.குணரெட்ணம் கோமாரி –கி.வ.வி.வன்னமணி தமிபிலுவில்- என்.தம்பிராசா தம்பட்டை – கா.கு.தில்லைக்குருக்கள் பனங்காடு-க.தோ.குருநாதபிள்ளை கோளாவில் - க.வ.வி.கந்தவனம் அக்கரைப்பற்று-அ.பூபாலபிள்ளை பனையடிப்பிட்டி – தோ. செ.சீனித்தம்பி நிந்தவூர்-த.பொ.த.கணபதிப்பிள்ளை
காரைதீவு- செ.பொன்னையா சம்மாந்துறை-தெ.சிவஞானம் மல்வத்தை-சி.சி.த.செல்லத்துரை மல்லிகைத்தீவு-நா.நாதபிள்ளை உடையார். சவளக்கடை-இ.சத்துருக்கப்போடி மகிளுர்-தெ.பொன்னையா சாய்ந்தமருது-க.ப.சீனித்தம்பிப் போடியாhர் கல்முனை- கு.சிவஞானம் நாற்பட்டிமுனை-க.வ.இரத்தினசிங்கம் பாண்டிருப்பு-ந.பாலிப்போடி எருவில்-சோ.உ.எதிர்மன்னசிங்கம் கோயில்போரதீவு-சா.வ.வி.சின்னவப்போடி பெரியபோரதீவு-க.வ.வி.இளையதம்பிப்போடி பெரியநீலாவணை-பொ.த.கனகசூரியம் வெல்லாவெளி-க.சுப்பிரமணியம் பழுகாமம் க.காசுபதி களுதாவளை-கி.கி.த.தம்பியப்பா அம்பாறை-சி.உ.சீவரெத்தினம் நாவற்குடா-ந.நொ.செல்லத்துரை
திருக்கோவில்; பிரதேசத்திற்கு உறுப்பினரைத் தரிவுசெய்ய அவ்வூர்ப்பிரதிநிதிகள் மறுத்துவிட்டனர்.காரணம் கேட்டதற்கு மகாசபையிலுள்ள காரியதரிசிப் பதவியை திருக்கோவிலுக்குத் தரவேண்டுமெனக் கேட்டனர்.

சபையோர் அதற்கு மறுப்புத்தெரிவிக்க வன்னிமையோ தேவையானால் உப காரியதரிசி என்ற பதவியைத்தரலாமென்றார். அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

அப்போது 30 வட்டாரப்பிரதிநிதிகளும் 05 பஞ்சாயத்துசபைப் பிரதிநிதிகளும் மொத்தமாக 35 பேர் அதிகாரசபையாக இயங்கிவந்தனர்.அதுவே ஆலயத்தைப் பரிபாலித்தவந்தனர்.
கூட்டம் கூடுவதானால் 18 பேர்கொண்ட கோரம் இருகக்வேண்டும். யாப்புத் திருத்தம் செய்யவேண்டுமெனின்      மூன்றிலிரண்டு பெரம்பான்மை ஆதரவு வேண்டும்.பின்பு இது நான்கில்மூன்று என மாற்றப்பட்டது.


பின்பு 1972 களில் தம்பிலுவில் திருக்கோவில் போட்டி மீண்டும் தலைதூக்கியது. அவர்களுக்கு செயலாளர் பதவி வேண்டுமென்பதே அதற்கான காரணமாகும்.

இறுதியில் அக்கரைப்பற்றுக்குரிய செயலாளர் பதவியை அவர்கள் திருக்கோவில் மக்களுக்காக உவந்தளித்தார்கள். அதனால் திருக்கோவில் பிரச்சினை தீர்ந்தது.
அதற்காக புதிதாக உப தலைவர் பதவியொன்று உருவாக்கப்பட்டு அது அக்கரைப்பற்றுக்கு வழங்கப்பட்டது.

1972 களின் பின்னர் மகாசபையிலுள்ள செயலாளர் பதவி திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுவருகிறது.தற்போது அப்பதவியை திருக்கோவிலைச் சேர்ந்த ஓய்வுநிலை உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் அ.செல்வராஜா அலங்கரிக்கிறார்.

அதனால் 1972க்கு பின்னர் மகாசபையானது 06 உறுப்பினர்களோடு இயங்கிவருகிறது. வட்டாரப்பிரதிநிதிககள் 30 இலிருந்து 20 ஆகக் குறைந்துள்ளது. ஏனெனில் சில வட்டாரங்கள் சரிவர இயங்காமல தாமாகவே தமது உறுப்புரிமையை இழந்துள்ளனர். எஞ்சியவர்களுக்கு திருவிழாச் செய்யும் கௌரவமும் வழங்கப்பட்டுள்ளது.

சமகால நிருவாகம் 

தற்போது மகாசபை உறுப்பினர்கள் 06 பேர் வட்டாரப்பொறுப்பாளர்கள் 20 பேர். மொத்தமாக 26 பிரதிநிதிகள் ஆலயத்தைப் பரிபாலித்துவருகின்றனர்.

தற்போதுதியங்கும் புதிய நிருவாகசபை
தலைவராக சுந்தரலிங்கம் சுரேஸ் (வன்னிமை வம்சவரன் - நற்பிட்டிமுனை) வண்ணக்கராக வன்னியசிங்கம்ஜெயந்தன்(தம்பிலுவில்)செயலாளராக அ.செல்வராஜா(திருக்கோவில்) உபதலைவராக க.சபாரெட்ணம் (அக்கரைப்பற்று)    பொருளாளராக  கொ.கிருஸ்ணமூர்த்தி (தம்பிலுவில்) கணக்குப்பிள்ளையாக இ.லோகிதராஜா(அக்கரைப்பற்று) ஆகிய அறுவரும் மகாசபை பிரதிநிதிகளாவர்.
இதைத்தவிர 20 வட்டாரப்பிரதிநிதிகள் பொத்துவில் முதல் எருவில் ஈறாகவுள்ள தமிழக்கிராமங்களைப் பிரதிபலிப்போராகவுள்ளனர்.

ஆலயவழக்கொன்று பொத்துவில் நீதிமன்றில் செல்கிறது. 
ஆலய பொக்கிச அறைக்கு மூன்று திறவுகோல்கள் இருத்தல் வேண்டும் என்றும் அவை வண்ணக்கர் பொருளாளர் கணக்குப்பிள்ளை ஆகியோர் ஒவ்வொருவரிடமும் இருத்தல் வேண்டும் என்று 1952ம் ஆண்டின் யாப்பு கூறுகிறது.

ஆலய பிரதமகுருவாக பல்லாண்டுகாலம் பிரம்ஸ்ரீ. நீதிநாதக்குருக்கள் பணியாற்றிவந்தார்.அவராது மறைவின்பின்னர் அவரது மருகர் பிரபல சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்கள், மகன் சிவஸ்ரீ. அங்குசநாதக் குருக்கள் போன்றோர் பூஜை புனஸ்காரங்களை சிறப்பாக நடாத்திவருகின்றனர்.

இறந்தோர்க்கான பிதிர்கடன் செலுத்துதலுக்கு உகந்த திருக்கோவில் ஆடிஅமாவாசைத் தீர்த்தமானது கிழக்கு மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 இதேபோன்று பிதிர்கடன் செலுத்துதலுக்கு (கிழக்கில்)மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையாரின் தலமும், ஆடி அமாவாசைத் தீர்த்தமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

பிதிர்க்கடன் செலுத்துவோர் இத்தகைய ஆலயங்களை நாடி தமது கடன்களை நிறைவேற்றி வருவதும் பாரம்பரிய நடைமுறையே.

எனவே இத்தகைய சிறப்பு பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமியின் அருள் பெற்று வாழ்வில் உய்வோமாக!!!

வித்தகர் விபுலமாமணி  வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர் 

 

சா.நடனசபேசன்


கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் இன்று (30) இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், தமிழரசு கட்சியின் முன்னாள் வேட்பாளர் செல்வராசா கணேஷ்ஷானந்தம் ஆகியோரும் பங்கேற்று இருந்தனர்.

இதன் போது நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற அதிகாரத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச் செயல் எனவும் அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுரக்குவதற்கான செயற்பாட்டிற்கும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்ற செயலென தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சுட்டிக்காட்டி இருந்தார்.

மேலும் இதே போன்றதொரு போராட்டம் கடந்த காலங்களில் இடம்பெற்ற போது மூன்று நாளில் முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக உயர்த்தி தருவோம் என பல அரசியல்வாதிகள் வாக்குறுதி வழங்கியதும், ராஜபக்ஷ அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய ஜனாதிபதி முன்னாள் பிரதமரமாக இருந்த காலத்தில் முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக உயர்த்தி தருவோம் என வாக்குறுதி வழங்கியதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

மேலும் கபினட் அதிகாரம் கிடைக்கப்பெற்ற பிரதேச செயலகத்தில் இயங்கிய இரண்டு கிராம சேவகப்பிரிவுகளை தெற்கு பிரதேச செயலகத்தில் அனுமதியின்றி இயங்கச் செய்திருப்பதும் மனித உரிமை மீறல் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டி இருந்தார். அதற்கு உடந்தையாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சில அதிகாரிகள் செயல்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

உள்நாட்டு அலுவலக அமைச்சினால் உப பிரதேச சீரகமாக இருந்து பிரதேச செயலகம் 1993ம் ஆண்டு கேபினட் அதிகாரம் கிடைக்கப்பெற்று இது ஒரு பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது இது உபதேச செயலமாக தரம் இரக்கப்பட்டதற்கான காரணம் என்ன? குறிப்பிட்ட சில இனத்தவர்கள் தங்களுடைய சுயலாபத்திற்காக தமிழர்களுக்கான அந்த உரிமை மறுக்கப்பட வேண்டும் என்பதற்காக சில சூழ்ச்சிகள் இடம் பெறுவதாகவும் அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நீதியைப் பெற்றுத் தராத இந்த பிரதேச செயலுக்குரிய அதிகாரங்களை பெற்று தர முடியாத அரசாங்கம் எவ்வாறு வடகிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்



 (சுமன்)



கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது குருக்கள்மடம் கலைவாணி வித்தயாலயத்திற்குச் சொந்தமான கட்டிடங்கள் மற்றும் மைதானத்தில் குருக்கள்மடம் இராணுவ முகாம் அமைத்திருக்கின்றமை தொடர்பில் தெரியப்படுத்தி இராணுவ முகாமை விடுவித்து அக்கட்டிடங்கள் மற்றும் மைதானத்தை மீண்டும் பாடசாலைக்கு ஒப்படைப்பது சம்மந்தமாகப் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கலந்துரையடப்பட்தற்கிணங்க குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கரணாகரம் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சென்று சம்மந்தப்பட்ட இராணவத்தினருடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்து அடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் அவர்களினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக குருகக்கள்மடம் இராணுவ முகாம் அமைந்துள்ள இடத்திற்கு நேற்றைய தினம் களவிஜயமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்விஜயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா உட்பட கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச செயலாளர், வலயக் கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லையாயினும் இரண்டாம் நிலை அதிகாரி அங்கிருந்தார். அவருடன் கலந்துரையாடியதற்கமைவாக ஒரு அறிக்கை தயாரிப்பதென முடிவெடுக்கப்பட்டது.

இரராணுவம் தற்போது அந்தப் பாடசாலை கட்டிடங்கள் அடங்கிய 2.9 ஏக்கர் நிலப்பரப்பைப் பாவிப்பதற்கு மேலதிகமாக அரச காணி 5 ஏக்கரையும் பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே பாடசாலைக்குரிய கட்டிடம் இருக்கும் காணியையும், மைதானத்தையும் விடுத்து ஏனைய 5 ஏக்கரையும் பாவிப்பதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கபப்படாதததையடுத்து அவர்கள் பாடசாலைக்குரிய காணி, மற்றும் கட்டிடங்களை விடுவிக்கும் படியாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு காணி விடுவிப்புக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.






 

(வி.ரி. சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற  கதிர்காம கந்தன் ஆலய கொத்துப்பந்தல் புதுப்பிக்கும் சடங்கு வழமை போல் யானைகளால் நேற்று முன்தினம்(25) நடைபெற்றது.

இச் சடங்கு ஆறாம் நாள் சடங்காக பண்டுதொட்டு நடைபெற்று வருகிறது. 

அதன்படி, முருகன் ஆலயத்தின் கொத்துப்பந்தல் மரக்கிளைகளால் புதுப்பிக்கும் சடங்கும் இந்நாளில் நடைபெற்றது.

முன்னதாக காட்டிலிருந்து வெட்டப்பட்ட மரக்கிளைகளை, வாசனா ஹஸ்திராஜய்யா தலைமையிலான யானை வர்க்கம் சுமந்துவந்து, மரக்கிளைகளை மாணிக்க கங்கையில்  கழுவும்.

கதிர்காம பஸ்நாயக்க நிலமே டிசான் குணசேகர சகிதம் மரக் கிளைகளை யானைகள் தும்பிக்கையால் சுமந்து கொண்டு வந்து கந்தனாலய பந்தலில் இடும்.

மாணிக்க கங்கையில் கழுவப்பட்ட கிளைகள் ஆலயத்திற்கு முன்பாக போடப்பட்டிருந்த பந்தலில் யானைகளின் மூலம் மாற்றம் செய்யப்பட்டது.
அந்த காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து பார்த்து ரசித்தார்கள்.





டிஜிட்டல் கல்வியறிவை ஊட்டும் நோக்குடன் கிராம்புற ங்களில்  திறன் வகுப்பறைகளை தாபிக்கப்படுகின்றது - வன்னி ஹோப் பணிப்பாளர் எம். பாரிஸ்  




கல்வி அமைச்சின் கலைத்திட்ட மாறுபாடுகளுக்கு ஏற்ற வகையில் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்குடன் இலங்கையில் பல்வேறு கிராம்புர பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை தாபித்து அதன் மூலம் எதிர்கால சந்ததியினரின் தரமானதும் தொழிநுட்பத்துடன் கூடியதுமான கல்வியை வழங்குவதே வன்னி ஹோபின் நோக்கமாகும்  என வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரீ. எம். பாரிஸ் தெரிவித்தாா்.

சம்மாந்துறைக் கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி விவேகானந்தா மகாவித்தியத்தில் திறன் (ஸ்ர்மாட்) வகுப்பறை ஒன்று செவ்வாய்கிழமை(20.06.2023) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இநத் நிகழ்வில் பிரதம அதியாக கலந்து கொண்டு உரையாற்றும்  போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டர்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வன்னி ஹோப் நிறுவனம் அவுஸ்ரேலியாலைத் தலமையமாகக் கொண்டு இயங்கினாலும் இலங்கையில் பின்தங்கிய கிராமங்களில் பல்வேறு வகையான மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி சா்ந்த திட்டங்களை இன,மத. பிரதேச  வேறுபாடின்றி வழங்கி வருகின்றது. விசேடமாக கல்வி சாா்ர்நத விடயங்களில் வன்னி ஹோப் நிறுவனம் கூடுதல் அவதானிப்புகளை செய்து திட்டங்களை அமலாக்கி வருகின்றது. வறுமைகை்  கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மாதாந்த புலமைப் பரிசில் பண உதவிகளும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகைகளும், அறநெறி மற்றும் முன்பள்ளி சிறாா்களுக்கு சத்துணவுத் திட்டங்கள், கிராமியப்புர பாடசாலைகளுக்கு திறன்வகுப்பறை மற்றும் கணினிக் கூடங்கள் நிறுவுதல், மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் போன்ற பல கல்வி நலன்சாா் திட்டங்களில் வன்னி ஹோப் ஈடுபட்டு வருகின்றது. இதன் மூலம் சிறந்ததொரு மாணவ சமூகத்தினை உருவாக்கவும், சிறப்பான தொழில் சாா் இளைஞர்களை உருவாக்கவுமே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார இடரை்பாடுகளுக்கு மத்தியில் கற்றல் இடர்பாடுகளை மாணவர்கள் எதிர்நோக்கி தங்களுடைய கல்வி நடவடிக்கையை பாதிக்காது அவர்களின் கற்றல் நடவவடிக்கை தங்குதடையின்றி செல்ல  வேண்டும் என்ற அவா எமக்குள்ளது. வறுமையைக் காட்டி கல்வியை இடை நடுவே நிறுத்தி விடாமல் அவை தொடர்ந்தும் முன்செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் வன்னி ஹோப் நிறுவனம் கல்வி சாா் திட்டங்களில் கூடுதல் அவதானிப்பை செலுத்தி அதிக பணத்தினை இது போன்ற திட்டங்களுக்கு செலவு செய்கின்றது. என்று தனது உரையில் குறிப்பிட்டாா்.

அவுஸ்ரேலியாவிலுள்ள அப்பாடசாலையின் முன்னாள் அதிபர் வேலுப்பிள்ளை குடும்பத்தினரதும், மற்றும் அமெரிக்காவிலுள்ள நல்லையா பவுண்டேனசினதும் முழு நிதி அனுசரணையில் வன்னிஹோப் இலங்கை அலுவலகத்தினால்  இதந்த திறன்வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறு  இலெட்சத்திற்கு அதிகமான நிதிப் பங்களிப்பில் இந்த ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. வித்தியாலய அதிபர் எம்.தருமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் யாஸீர் அறபாத் முகைடீன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி.பரமதாயாளன், நிதி வழங்குனர் சார்பில் அப்பாடசாலையின் முன்னாள் அதிபரின் துணைவியார் திருமதி. வேலுப்பிள்ளை, மற்றும் வன்னிஹோப் நிறுவனத்தின் இணைப்பாளர்களான எஸ்.ரேகா, ஆர்.கணேசமூர்த்தி, எம்.யு.முகமட்.வஸீம், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர் என்பதுடன் குறித்த கிராமப் பாடசாலை மாணவர்கள் ஸ்மார்ட் கல்வியைத் தொடர்வதற்கு உதவி செய்த வன்னிஹோப் நிறுவனத்திற்கு இதன்போது பாடசாலைச் சமூகம் தமது நன்றியறிதலைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் - .சக்திவேல்






 

 


(நூருல் ஹுதா உமர்)

கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் 01 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா புதன்கிழமை (26) பாடசாலை வளாகத்தில்  நடைபெற்றது. 

"செயற்பாட்டு அடிப்படையிலான வாய் மொழி மூல ஆங்கிலம்" எனும் தொனிப்பொருளில் பாடசாலையின் அதிபர் ஏ.எச்..அலி அக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் கெளரவ அதிதியாக கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியுமான ஏ.பி. எப். நஸ்மியா சனூஸும் விசேட அதிதிகளாக பார்ட்னர்ஸ் போ சேன்ஜ் இன்டெர்னசனலின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் றிசாத் செரீப், வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்று பொறியலாளர் இஸட்.ஏ.எம்.அஜ்மீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  

மேலும் பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், அதிதிகளால் மாணவர்களுக்கு அகரம் எழுதப்பழக்கிய நிகழ்வும் இடம்பெற்ற அதேவேளை, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் மாலை அணிவித்து புதிதாக அனுமதி பெற்ற தரம் 1 மாணவர்களை வரவேற்றனர்.





 


மாளிகைக்காடு நிருபர்

பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது தொடர்பில் ஜனாதிபதி சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுள்ளதாகவும் தம்மிடம் தெரிவித்ததாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

இன்று (26) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை தானும்,  அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மானும்  சந்தித்து குறித்த 6 அமைப்புகளின் தடைநீக்கம் குறித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு உறுத்தியளித்ததாக அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 

அவ்வமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் அண்மையில் கலந்துரையாடியுள்ள விடயங்களை பற்றி விளக்கி இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்த நாங்கள் இவ்விடயத்தின் அவசியம் குறித்தும் ஜனாதிபதிக்கு  எடுத்துரைத்தோம். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாங்கள் முன்வைத்த வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்பில் இதற்கான நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டதுடன்  தடை செய்யப்பட்டவற்றில் 6 அமைப்புகள் எவ்வித பயங்கரவாத சம்பவங்களுடனோ பயங்கரவாத அமைப்புகளுடனோ தொடர்பைக் கொண்டிருக்கவில்லை எனவே, இவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென நானும் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மானும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

எமது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். இதனடிப்படையில் தடை செய்யப்பட்ட குறித்த 6 அமைப்புகளின் முக்கியஸ்தர்களுடன்  பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள்  தனித்தனியே கலந்துரையாடியுள்ளனர். மேலும், குறித்த 6 முஸ்லிம் அமைப்புகளிடமிருந்தும் பாதுகாப்பு அமைச்சினால் சில ஆவணங்கள் கோரப்பட்டு அந்த ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 6 அமைப்புகள் மீதான தடையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மேலும் அவர் தெரிவித்தார்